மஸ்கட் - டெல்லி இண்டிகோ விமானம் நாக்பூரில் திடீரென தரையிறக்கம்.. பயணிகள் அச்சம்..

Siva
செவ்வாய், 17 ஜூன் 2025 (14:51 IST)
மஸ்கட்டிலிருந்து கொச்சி வழியாக டெல்லி சென்றுகொண்டிருந்த இண்டிகோ விமானம்  வெடிகுண்டு மிரட்டல் வந்ததால், நாக்பூரில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
 
இதுகுறித்து காவல் துறையினர் கூறுகையில், வெடிகுண்டு மிரட்டல் வந்தவுடன், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானம் நாக்பூரில் தரையிறக்கப்பட்டது. விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். இதுவரை எந்த சந்தேகத்திற்கிடமான பொருளும் கண்டெடுக்கப்படவில்லை என நாக்பூர் துணை ஆணையர் லோஹித் மதானி தெரிவித்துள்ளார்.
 
கொச்சின் சர்வதேச விமான நிலையத்தின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததாகவும், அதன் பிறகே அவசர தரையிறக்கம் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மஸ்கட்டில் இருந்து கொச்சி வந்து, பின்னர் 157 பயணிகள் மற்றும் 6 விமானப் பணியாளர்களுடன் டெல்லிக்குப் புறப்பட்ட விமானத்திலேயே இந்த மிரட்டல் வந்துள்ளது.
 
தற்போது பாதுகாப்பு சோதனைகள் முடிந்ததும், விமானம் டெல்லிக்குச் செல்லும்" என்று சிஐஏஎல் தெரிவித்துள்ளது.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிரம்ப் நிறுத்தியதாக கூறப்பட்ட இஸ்ரேல் - பாலஸ்தீன போர் மீண்டும் வெடித்தது.. 100 பேர் பலி..!

யாருடன் கூட்டணி.. தவெக நிர்வாகி சி.டி.ஆர். நிர்மல் குமார் முக்கிய தகவல்..!

அமலாக்கத் துறை கூறிய நகராட்சி பணி நியமன ஊழல் குற்றச்சாட்டு: அமைச்சர் கே.என். நேரு மறுப்பு

காற்றில் தொடங்கி கழிவறை வரை ஊழல்.. திமுக அரசை விமர்சனம் செய்த நயினார் நாகேந்திரன்

வாக்குகளுக்காக மோடி நடனமாடவும் தயங்க மாட்டார்: ராகுல் காந்தி விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments