Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்! – அவசரமாக தரையிறக்கம்!

Webdunia
செவ்வாய், 9 ஆகஸ்ட் 2022 (15:07 IST)
பெங்களூருக்கு வந்துக் கொண்டிருந்த இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் விமானம் மீண்டும் தரையிறக்கப்பட்டது.

ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரில் இருந்து கர்நாடகாவின் பெங்களூர் விமான நிலையத்திற்கு இண்டிகோ நிறுவனத்தின் விமானம் ஒன்று 175 பயணிகளோடு புறப்பட்டது.

விமானம் பெங்களூரை அடைய சில நிமிடங்கள் இருந்த நிலையில் விமானத்தின் கழிவறையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து கடிதம் ஒன்று இருந்ததை விமான பணிப்பெண் கண்டெடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் விமானிக்கு தகவல் தெரிவிக்க, விமானி விமான நிலைய கட்டுப்பாட்டு மையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். அதை தொடர்ந்து விமானம் தரையிறக்கப்பட்டதும் சோதனை செய்யப்பட்டது. ஆனால் விமானத்தில் வெடிகுண்டு எதுவும் கண்டறியப்படவில்லை.

எனினும் பாதுகாப்பு கருதி வேறொரு விமானத்தில் பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பையே கடித்து கொன்ற 1 வயது குழந்தை.. பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்த சம்பவம்..!

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தில் 11 பேரை இழந்த இளைஞர்.. ஜூலை 30 என்ற பெயரில் உணவகம்..!

ஓட்டப்பந்தயத்தில் மயங்கி விழுந்த வீராங்கனை.. ஆம்புலன்ஸில் அழைத்து சென்றபோது பாலியல் பலாத்காரம்..!

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. எஸ்.ஐ. ராஜாராமன் மறைவு குறித்து ஈபிஎஸ்

தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளிக்க இருக்கும் மனு.. என்ன கோரிக்கை?

அடுத்த கட்டுரையில்
Show comments