Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்கா அழைத்த நாசா: போக மறுத்த இந்திய மாணவர்

Webdunia
சனி, 8 பிப்ரவரி 2020 (10:02 IST)
Gopal Jee
இந்திய மாணவர் ஒருவரின் கண்டுபிடிப்புகளை கண்டு வியந்து அமெரிக்காவுக்கு நாசா அழைத்தும் செல்ல மாணவன் மறுத்துள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம் பாகல்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறு கிராமத்தை சேர்ந்தவர் கோபால்ஜி. இவரது தந்தை ஒரு விவசாயி. ஏழ்மையான குடும்பத்தில் பிறந்திருந்தாலும் சாதிக்கும் எண்ணம் கொண்ட கோபால்ஜி பல்வேறு கண்டுபிடிப்புகளை செய்துள்ளார்.

2017ம் ஆண்டில் பிரதமர் மோடியை சந்தித்த கோபால்ஜி தனது முயற்சிகள் பற்றி அவரிடம் எடுத்துரைத்தார். அதை தொடர்ந்து அறிவியல் தொழில்நுட்பத்துறை, அகமதாபாத்தில் உள்ள தேசிய கண்டுபிடிப்பு அறக்கட்டளை முதலியவற்றில் தனது பல்வேறு கண்டுபிடிப்புகளை செய்து காட்டியுள்ளார்.

இவரது கண்டுபிடிப்புகள் குறித்து அறிந்த அமெரிக்காவின் நாசா போன்ற அமைப்புகள் இவருக்கு தங்கள் நாட்டில் அழைப்பு விடுத்துள்ளன. ஆனால் அந்த அழைப்பை மறுத்துள்ள கோபால்ஜி இந்தியாவுக்காக கண்டுபிடிப்புகளை உருவாக்க விரும்புவதாக கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ரூ.55,000ஐ தாண்டியது தங்கம் விலை.. ஒரு லட்சத்தை தாண்டியது வெள்ளி விலை.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

அரசு கல்லூரிகளில் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்! – மிஸ் பண்ணிடாதீங்க!

சஹாரா க்ரூப்ஸை குறிவைத்த Scam 2010 வெப் சிரிஸ்! – வழக்கு தொடர்வோம் என எச்சரிக்கை!

கூட்ட நெரிசலில் இறந்தாரா? கொலையா? செண்ட்ரல் வந்த ரயிலில் அழுகி கிடந்த ஆண் சடலம்!

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை.. மகிழ்ச்சியில் பொதுமக்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments