Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்திய கச்சா எண்ணெய் கப்பல் மீது ட்ரோன் தாக்குதல்.. பாதுகாக்க போர்க்கப்பல் விரைவு..!

இந்திய கச்சா எண்ணெய் கப்பல் மீது ட்ரோன் தாக்குதல்.. பாதுகாக்க போர்க்கப்பல் விரைவு..!
, சனி, 23 டிசம்பர் 2023 (18:08 IST)
இந்திய கச்சா எண்ணெய் கப்பல் மீது நடுக்கடலில் ட்ரோன் மூலம் தாக்குதல் செய்யப்பட்டுள்ளதை அடுத்து கச்சா எண்ணெய் கப்பலை காப்பாற்ற இந்திய போர்க்கப்பல் அனுப்பப்பட்டுள்ளதாக இந்திய கடற்படை தகவல் தெரிவித்துள்ளது. 
 
 இந்திய கச்சா எண்ணெய் கப்பல் கடலில் வந்து கொண்டிருந்தபோது ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனை அடுத்து கப்பலில் இருப்பவர்களை மீட்க கடலோர காவல் படையின் விக்ரம் என்ற போர் கப்பல் விரைந்துள்ளதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது. 
 
கச்சா எண்ணெய் கப்பல் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் ஆனால் அதே நேரத்தில் கப்பலில் உள்ள அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர் என்றும் பாதுகாப்பு துறையும் தெரிவித்துள்ளது. 
 
கச்சா எண்ணெய் கப்பலை நோக்கி போர்க்கப்பல் சென்று கொண்டிருப்பதாகவும் இன்னும் சில மணி நேரத்தில் போர்க் கப்பல் சம்பவ இடத்திற்கு சென்று விடும் என்றும் கடற்படை தகவல் தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

''கட்டணமின்றி சான்றிதழ்கள் பெறலாம்''- உயர்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு