பறவை மோதியதில் இந்திய விமானம் விபத்து

Webdunia
வெள்ளி, 8 மார்ச் 2019 (20:48 IST)
இந்திய விமானப்படையில் உள்ள மிக் 21 ரக போர் விமானம் ஒன்று பறவைமோதியதால் விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பிகானீர் என்ற இடத்தில், இன்று இந்திய விமானப்படையை சேர்ந்த மிக் 21 ரக விமானத்தின் மீது பறவை மோதியதால் தான் இந்த விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.
 
ஆனால் விமானத்தை இயக்கிய விமானி  பாராசூட் மூலம் குதித்து உயிர் தப்பிக் கொண்டார். இந்த விபத்துக்கான காரணம் பற்றி அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
 
இதேபோல் கடந்த மாதம் 27 ஆம் தேதி அன்று கஷ்மீர் மாநிலத்தில் உள்ள ஸ்ரீநகரில் எம் ஐ 17 என்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதில் மொத்தம் 6 பேர் உயிரிழந்தனர். இவர்களில் இருவர் விமானிகள் ஆவர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜ்யசபா சீட்டுக்காக அதிமுக கூட்டணியா?!.. பிரேமலதா விளக்கம்!...

பாஜகவால் என்னை தோற்கடிக்க முடியாது.. சவால் விடுத்த மம்தா பானர்ஜி..!

தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல் செம்மொழி பூங்கா திறப்பு விழாவா? அண்ணாமலை கண்டனம்..!

சீன பாஸ்போர்ட் கேட்டு அருணாச்சல பிரதேச பெண்ணை துன்புறுத்தவில்லை: சீனா மறுப்பு..!

என்னை வங்காளத்தில் குறிவைத்தால் மொத்த தேசத்தையும் குலுங்க வைப்பேன்: மம்தா பானர்ஜி

அடுத்த கட்டுரையில்
Show comments