Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு அனுமதி! – மத்திய அரசு உத்தரவு!

கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு அனுமதி! – மத்திய அரசு உத்தரவு!
, ஞாயிறு, 3 ஜனவரி 2021 (11:23 IST)
இந்தியாவில் கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவிற்கு எதிரான மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் பல நாடுகளும் உள்ள நிலையில் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன.

இந்நிலையில் அந்த நிறுவனங்கள் அவசர கால மருந்தாக தங்கள் தடுப்பூசியை பயன்படுத்த அனுமதிக்குமாறு மத்திய அரசிடம் கோரின. அதை தொடர்ந்து அந்த இரண்டு தடுப்பூசிகளையும் ஆய்வு செய்த மத்திய மருந்துகள் கட்டுப்பாட்டு துறை பல்வேறு சோதனைகளுக்கு பிறகு இந்த தடுப்பூசிகளை பயன்படுத்த பரிந்துரை செய்துள்ளது.

மத்திய மருந்துகள் கட்டுப்பாட்டு துறையின் பரிந்துரையை ஏற்று இந்தியாவில் அவசர கால பயன்பாட்டில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளை பயன்படுத்தலாம் என அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கமல்ஹாசனின் அடுத்தகட்ட பிரச்சாரம்: நாளை முதல் எந்த மாவட்டத்தில்?