Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யாரும் கீவ் போகாதீங்க.. உக்ரைன் இந்தியர்களுக்கு எச்சரிக்கை! – இந்திய தூதரகம்!

Webdunia
வியாழன், 24 பிப்ரவரி 2022 (12:33 IST)
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில் உக்ரைன் வாழ் இந்தியர்களுக்கு தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

உக்ரைன் எல்லையில் ரஷ்யா தனது ராணுவத்தை குவித்து வந்த நிலையில் சில மணி நேரங்கள் முன்னதாக அதிகாரப்பூர்வமாக போரை அறிவித்துள்ளார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின். அதை தொடர்ந்து உக்ரைனின் நகரங்கள் மீது ரஷ்யா குண்டு மழை பொழிய தொடங்கியுள்ளது.

இதனால் உக்ரைனில் உள்ள இந்தியர்களுக்கு இந்திய தூதரகம் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் “போர் மூண்டுள்ள இந்த கடினமான சூழலில் உக்ரைன் வாழ் இந்தியர்களுக்கு தூதரகம் துணையாக நிற்கும். உக்ரைன் வாழ் இந்திய மக்கள் தங்கள் வீடுகள், குடியிருப்புகள், தங்கியுள்ள விடுதிகளை விட்டு வெளியேறாமல் பத்திரமாக அங்கேயே இருக்க வேண்டும். கீவ் நகரம் நோக்கி சென்று கொண்டிருக்கும் மக்கள் மற்றும் கீழ் நகரின் கிழக்கு நுழைவாயில்களில் பயணிப்போர் பயணங்களை தவிர்த்து தங்களது சொந்த பகுதிகளை சென்றடைய வேண்டும்” என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமாவளவன் பேசிக்கொண்டிருந்த போது மைக் துண்டிப்பு..! மக்களவையில் சலசலப்பு..!!

செந்தில் பாலாஜி வழக்கு விசாரணையை 4 மாதத்தில் முடிக்க வேண்டும்..! ஐகோர்ட் உத்தரவு..!!

நீலகிரி, கோவை மலை பகுதியில் முதல் மிக கனமழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம்

சபாநாயகர் ஓம் பிர்லாவின் உரைக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் கண்டனம்.. அவையில் பரபரப்பு..!

சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கு..! ஜூலை 3-ம் தேதிக்கு ஒத்திவைப்பு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments