Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போர் விமானங்களை சாலையில் இறக்கி பயிற்சி பெறும் இந்திய ராணுவம்.. நடுக்கத்தில் பாகிஸ்தான்..!

Mahendran
வெள்ளி, 2 மே 2025 (15:07 IST)
போர் விமானங்களை சாலையில் இறக்கி இந்திய விமானப்படை வீரர்கள் பயிற்சி பெற்று வரும் நிலையில், போர் எப்போது வேண்டுமானாலும் தொடங்கலாம் என்ற அச்சத்தில் பாகிஸ்தான் இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
காஷ்மீரில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலை அடுத்து, இந்தியா பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், அடுத்த கட்டமாக பாகிஸ்தான் மீது போர் தொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
அதன் ஒரு பகுதியாக, இந்திய விமானப்படையினர் போர் விமானங்களை சாலைகளில் இறக்கி ஒத்திகைகளில் ஈடுபட்ட சம்பவம் பாகிஸ்தானை அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
 
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள விரைவு சாலையில், அதிநவீன போர் விமானங்களை தரையிறக்கும் ஒத்திகை இன்று நடைபெற்றது. இது குறித்த வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.
 
இதனால், எந்த நேரத்திலும் போர் விமானங்கள் பாகிஸ்தானை தாக்கும் என்று கூறப்படுவதால், இரு நாடுகள் எல்லைகளில் பதற்றம் அதிகமாக உள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேச நபர் வீடு கட்டி வாடகைக்கு விட்டாரா? திருப்பூரில் அதிர்ச்சி..!

எனது உயிருக்கு ஆபத்து: ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம் திடுக் புகார்..!

ஆதார், பான் கார்டு, ரேசன் கார்டு இந்திய குடியுரிமை சான்றிதழ் அல்ல.. மத்திய அரசு அறிவிப்பு

கிறிஸ்துவ மதத்திற்கு மாறியவர் SC/ST தடுப்பு சட்டத்தின் கீழ் புகார் அளிக்க முடியாது: நீதிமன்றம்.

வக்பு சட்டத்திற்கு எதிர்ப்பு.. பவர் ஸ்டேஷனில் மின்சாரத்தை நிறுத்திய ஊழியர் சஸ்பெண்ட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments