Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இழுத்து அடிக்கும் சீனா; தோல்வியிலேயே முடியும் இந்திய முயற்சி!

இழுத்து அடிக்கும் சீனா; தோல்வியிலேயே முடியும் இந்திய முயற்சி!
, வியாழன், 3 செப்டம்பர் 2020 (09:52 IST)
இந்தியா - சீனா மூன்றாவது பேச்சுவார்த்தையும் தோல்வியிலேயே முடிந்தது என தகவல் வெளியாகியுள்ளது. 
 
கிழக்கு லடாக்கில் பாங்கோங் டி சோ ஏரி பகுதியில் இந்திய, சீன ராணுவ வீரர்களுக்கு இடையே கடந்த சனிக்கிழமை இரவு மீண்டும் மோதல் ஏற்பட்டது. அத்துமீறிய சீன வீரர்களை தடுத்து நிறுத்தி இந்திய வீரர்கள் பதிலடி கொடுத்தனர்.   
 
இதனால் எல்லையில் இரு நாடுகள் இடையே மீண்டும் பதற்றம் தொற்றிக் கொண்டுள்ளது. இதனை சரிசெய்ய இரு நாட்டு ராணுவத்தை சேர்ந்த பிரிகேடியர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அது முன்னேற்றத்தை ஏற்படுத்தவில்லை.   
 
இதனையடுத்து இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்த நிலையில் எல்லைப் பிரச்னை பற்றி இந்தியா - சீனா இடையே நேற்று படைப்பிரிவு தளபதிகள் மட்டத்தில் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையும் தோல்வியிலேயே முடிந்தது. 
 
தன்னிச்சையாக எல்லை வரையறையை மாற்றியமைக்க கூடாது என்ற நிலைப்பாட்டில் இந்தியா உறுதியாக உள்ளது. ஆனால், சீனா இதை ஏற்க மறுக்கிறது. எனவே தான் பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியவில்லை. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

38 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்புகள்; இந்திய நிலவரம்!