சீனாவிலிருந்து விமானத்தில் வந்த இந்தியர்கள்: டெல்லியில் மருத்துவ பரிசோதனை

Webdunia
சனி, 1 பிப்ரவரி 2020 (08:46 IST)
சீனாவில் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் அங்கு சிக்கி தவித்த இந்தியர்கள் சிறப்பு விமானம் மூலம் இந்தியா அழைத்துவரப்பட்டனர்.

சீனாவின் வுகான் மாகாணத்தில் கொரோனா வைரஸ் வேகமாக ப்ரவி வருகிறது. இதனால் விகான் மற்றும் சுற்றியுள்ள 12 நகரங்களில் அனைத்து விதமான போக்குவரத்துகளும் தடை செய்யப்பட்டன. இதனால் சீனாவில் உள்ள இந்தியர்கள் இந்தியாவுக்கு திரும்ப முடியாமல் தவித்து வந்தனர்.

இந்நிலையில் சீன அரசிடம் அனுமதி பெற்று இந்தியர்களை மீட்க சிறப்பு விமானத்தை சீனாவுக்கு அனுப்பியது இந்தியா. நேற்று புறப்பட்டு சென்ற அந்த விமானம் சீனாவில் உள்ள 324 பேரை மீட்டு இன்று இந்தியா திரும்பியுள்ளது. அந்த 324 பேருக்கும் டெல்லியில் உயர்மட்ட மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன. 14 நாட்கள் மருத்து சிகிச்சையில் வைத்திருந்து அவர்களுக்கு வைரஸ் அறிகுறிகள் இல்லை என்பதை உறுதி செய்த பிறகே தங்களது ஊர்களுக்கு அனுப்பப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற சிஐஎஸ்எஃப் பாதுகாப்புடன் அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னையில் நீர் தேக்கமில்லை; விஜய் வீட்டிலிருந்து பேசுகிறார்! டிகேஎஸ் இளங்கோவன்..!

தீபம் ஏற்ற உரிமை இல்லையா?... திமுக அரசை விளாசும் வானதி சீனிவாசன்...

13 பேரை கொன்ற குற்றவாளி.. 80,000 பேர் முன்னிலையில் மரண தண்டனை நிறைவேற்றம்! சுட்டுக்கொன்ற சிறுவன்..!

25 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை: சென்னையில் இன்று லேசான வெயில்..!

அடுத்த கட்டுரையில்
Show comments