இம்ரான்கானின் அனைத்து சமூக வலைத்தளங்களுக்கும் தடை.. மோடி அரசின் இன்னொரு அதிரடி..!

Siva
ஞாயிறு, 4 மே 2025 (14:55 IST)
முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் அனைத்து சமூக வலைதளங்களுக்கும் மோடி அரசு தடை விதித்துள்ளதாக கூறப்படும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
கடந்த மாதம் 22ஆம் தேதி காஷ்மீரில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னர், இந்தியா–பாகிஸ்தான் போர் எந்த நேரத்திலும் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்த நிலையில் பாகிஸ்தானில் உள்ள பிரபலங்கள் தங்களுடைய சமூக வலைதளங்களில் இந்தியாவை குறித்து அவதூறாகவும் பொய்யான தகவல்களையும் பதிவிட்டு வருவதை அடுத்து, பல சமூக வலைதள பக்கங்கள் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது என்பது தெரிய வருகிறது.
 
பல YouTube சேனல்கள், பாகிஸ்தான் நியூஸ் சேனல்கள் ஆகியவை தடை செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் அனைத்து சமூக வலைதள பக்கங்களும் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
இம்ரான் கான் தற்போது சிறையில் இருந்தாலும், அவரது ஆதரவாளர்கள் சமூக வலைதள பக்கங்கள் மூலம் அவதூறான கருத்துக்களை வெளியிட்டு வருவதால், மோடி அரசு அதிரடியாக நடவடிக்கை எடுத்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments