Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மற்ற நாடுகளை விட இந்தியா நல்ல நிலையில் உள்ளது! – மத்திய அமைச்சர் கருத்து!

Webdunia
புதன், 10 ஜூன் 2020 (08:21 IST)
இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் இந்தியா மற்ற நாடுகளை விட நல்ல நிலையில் உள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. உலக அளவில் கொரோனா பாதிப்புகள் அதிகமுள்ள நாடுகளில் இந்தியா ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. மகாராஷ்டிரா, தமிழகம், டெல்லி போன்ற பகுதிகளில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. ஆரம்பத்தில் குறைவாக இருந்த பாதிப்புகள் தற்போது நாளொன்றுக்கு 10 ஆயிரம் வீதம் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் மத்திய சுகாதார அமைச்சர் “பொதுமக்கள் இன்னும் அதிக விழிப்புணர்வோடு செயல்பட வேண்டும். முகக்கவசங்கள் அணிய வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் மற்ற நாடுகளை ஒப்பிடும்போது இந்தியா நல்ல நிலையில் உள்ளது. ஆனால் அதில் மன நிறைவு அடைவதற்கு இடமில்லை” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

நீட் தேர்வு நாடகத்திற்கு முற்றுப்புள்ளி வையுங்கள்! சென்னை மாணவி தற்கொலை குறித்து ஈபிஎஸ்..!

திடீரென டெல்லி சென்ற செங்கோட்டையன்.. பதில் கூற மறுத்த எடப்பாடி பழனிசாமி..!

அடுத்த கட்டுரையில்
Show comments