Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாகிஸ்தானை மன்னை கவ்வ செய்வோம்: பிசிசிஐ தலைவர்

பாகிஸ்தானை மன்னை கவ்வ செய்வோம்: பிசிசிஐ தலைவர்
, செவ்வாய், 4 அக்டோபர் 2016 (18:25 IST)
போர்க்களம் என்றாலும், கிரிக்கெட் என்றாலும் பாகிஸ்தானால் இந்தியாவை வெல்ல முடியாது என பிசிசிஐ தலைவர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார்.


 

 
இந்தியாவுடனான போருக்கு பாகிஸ்தான் எப்போதும் ஆயத்தமாக இருப்பதாகவும், ஆல் அவுட் செய்ய தயாராக இருந்ததாகவும் அந்நாட்டு கிரிக்கெட் வீரர் ஜாவீத் மியான்தத் கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவரும், பாரதிய ஜனதா நாடாளுமன்ற உறுப்பினருமான அனுராக் தாகூர் கூறியதாவது:-
 
கார்கில் போரையும் மியான்தத் நினைவு கூர வேண்டும். உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளிலும் பாகிஸ்தானால் இதுவரை இந்தியாவை வெல்ல முடியவில்லை. தேவை ஏற்பட்டால் பாகிஸ்தானை, இனியும் மண்ணை கவ்வ செய்யும் சக்தி இந்தியாவுக்கு உண்டு என்று கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முரண்டு பிடித்த மத்திய அரசு; கையை விரித்த உச்ச நீதிமன்றம்: மேலாண்மை வாரிய உத்தரவு நிறுத்தம்!