Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

15 பேர் பலி; 8,822 புதிய பாதிப்பு - 24 மணி நேர நிலவரம்!!

15 பேர் பலி; 8,822 புதிய பாதிப்பு - 24 மணி நேர நிலவரம்!!
, புதன், 15 ஜூன் 2022 (09:09 IST)
இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக மெல்ல குறைய தொடங்கிய நிலையில் தற்போது மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளது. 

 
கடந்த சில மாதங்கள் முன்னதாக 3 லட்சத்திற்கும் அதிகமாக பதிவான தினசரி பாதிப்புகள் தற்போது வேகமாக குறையத் தொடங்கியது. முன்னதாக 8 ஆயிரத்திற்கும் மேல் அதிகரித்த பாதிப்புகள் நேற்று 6,594 ஆக இருந்த நிலையில் இன்று புதிதாக 8,822 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,32,45,517 ஆக உயர்ந்தது.
 
கொரொனாவால் புதிதாக 15 பேர் இறந்துள்ளனர். இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,24,792 ஆக உயர்ந்தது. கொரோனா தொற்றில் இருந்து ஒரே நாளில் 5,718 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,26,77,088 ஆக உயர்ந்துள்ளது.
 
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 53,637 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்தியாவில் 1,95,50,87,271 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 13,58,607 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டிவிட்டர் ஊழியர்களுக்கு பறந்த இமெயில் - எலான் மஸ்க் வருகிறாராம்!!