Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீனாவில் இருந்து இனி தொலைக்காட்சி இறக்குமதி கிடையாது: மத்திய அரசு அதிரடி

Webdunia
வெள்ளி, 31 ஜூலை 2020 (20:17 IST)
சீனாவிலிருந்து தொலைக்காட்சி இறக்குமதிக்கு இந்தியா திடீரென கட்டுப்பாடு விதித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
கடந்த சில வாரங்களுக்கு முன்னால் இந்திய மற்றும் சீன ராணுவ வீரர்களுக்கு இடையே லடாக்கில் உள்ள கால்வான் என்ற பள்ளத்தாக்கில் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர்.
 
இந்த சம்பவத்திற்கு பின்னர் சீனாவுடனான உறவை துண்டித்துக்கொள்ள இந்தியா முடிவு செய்தது. முதல் கட்டமாக சீனாவின் 59 செயலிகளுக்கு தடை விதித்தது. இதில் டிக்டாக், ஹலோ உள்பட பல முக்கிய செயலிகள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
மேலும் இந்திய ரயில்வேயில் சீன நிறுவனங்கள் பெற்ற ஒப்பந்தத்தையும் ரத்து செய்தது. இவ்வாறு படிப்படியாக சீனாவுக்கு எதிராக செக் வைத்து கொண்டிருக்கும் இந்திய அரசு தற்போது சீனாவில் இருந்து வண்ணத் தொலைக் காட்சியை இந்தியாவுக்கு இறக்குமதி செய்ய கட்டுப்பாடு விதித்துள்ளது
 
இந்த கட்டுப்பாட்டால் இனி சீன நிறுவனத்தின் தொலைக்காட்சிகள் இந்தியாவுக்கு இறக்குமதி ஆவதில் சிக்கல் என்று கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடையும் கட்டணமில்லா பயண அட்டைகள்.. அதன் பிறகு என்ன ஆகும்?

அமெரிக்காவில் இருந்து விரட்டியடிக்கப்படும் இந்தியர்கள்.. அடுத்த விமானம் எப்போது?

20லி குடிநீர் கேன்களை 50 முறைகளுக்கு பயன்படுத்தினால்... உணவு பாதுகாப்பு துறை எச்சரிக்கை..!

திருமலை திருப்பதி கோவிலில் இந்துக்களுக்கு மட்டுமே வேலை: சந்திரபாபு நாயுடு அறிவிப்பு..!

ஸ்டாலின் கூட்டும் தொகுதி மறுசீரமைப்பு கூட்டு நடவடிக்கை குழு..மம்தா பானர்ஜி புறக்கணிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments