Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கனடா – இந்தியா விசா சேவை மீண்டும் தொடக்கம்! – பயணிகள் மகிழ்ச்சி!

Webdunia
வியாழன், 26 அக்டோபர் 2023 (15:20 IST)
கனடா – இந்தியா இடையே விசா சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது.



இந்தியாவிலிருந்து சென்று கனடாவில் வாழ்ந்து வந்த காலிஸ்தான் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டிருந்த ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சமீபத்தில் கனடாவில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த கொலை சம்பவத்திற்கு பின்னால் இந்திய தூதரக அதிகாரி உள்ளதாக சந்தேகித்த கனடா அரசு அவரை கனடாவிலிருந்து வெளியேற்றியது.

இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்த இந்திய அரசு இந்தியாவில் உள்ள கனட தூதரை வெளியேற்றியதுடன், கனடா – இந்தியா இடையேயான விசா சேவையையும் தற்காலிகமாக ரத்து செய்தது. இதனால் கனடா – இந்தியா உறவில் விரிசல் ஏற்பட்டிருந்தது.

செப்டம்பரில் நிறுத்தப்பட்ட இந்த விசா சேவையை தற்போது மீண்டும் தொடங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் இரு நாட்டுக்கு இடையே ஏற்பட்ட உறவுநிலை விரிசல் மெல்ல சுமூகமான நிலைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பலுசிஸ்தான் தான் இனி எங்கள் நாடு, பாகிஸ்தானில் இருந்து பிரிந்துவிட்டோம்.. அதிர்ச்சி அறிவிப்பு..!

ஆகமம் இல்லாத கோயில்களை அடையாளம் காண வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 10 காசுகள் உயர்வு.. இன்னும் உயர வாய்ப்பு..!

6000 ஊழியர்களை திடீரென வேலைநீக்கம் செய்த மைக்ரோசாப்ட்.. ஏஐ காரணமா?

அதிபர் டிரம்ப்பை திடீரென சந்தித்த முகேஷ் அம்பானி! என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments