Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒமிக்ரான் அச்சுறுத்தல்; சர்வதேச விமான சேவை ஒத்திவைப்பு! – மத்திய அரசு அறிவிப்பு!

Webdunia
புதன், 1 டிசம்பர் 2021 (15:29 IST)
ஒமிக்ரான் வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக சர்வதேச விமான சேவைகளை தொடங்குவதை மத்திய அரசு ஒத்திவைத்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டு அலை பாதிப்புகள் தொடர்ந்து வந்த நிலையில் சர்வதேச விமான சேவைகளை மத்திய அரசு நிறுத்தி வைத்தது. இதனால் சில நாடுகளுக்கு சிறப்பு விமான சேவைகள் மட்டுமே தொடர்ந்து வருகின்றன. இந்நிலையில் கடந்த சில நாட்களாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதால் டிசம்பர் 15 முதல் சர்வதேச விமான சேவைகள் தொடங்கப்பட உள்ளதாக மத்திய அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில் தற்போது உலக நாடுகள் சிலவற்றில் தென் ஆப்பிரிக்காவிலிருந்து பரவத் தொடங்கிய ஒமிக்ரான் வைரஸின் பாதிப்புகள் தென்பட தொடங்கியுள்ளன. அதனால் இந்தியாவில் ஒமிக்ரான் பரவாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. அதன் காரணமாக டிசம்பர் 15 முதல் தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட சர்வதேச விமான சேவைகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

17 வயது பிளஸ் 2 மாணவியை கர்ப்பமாக்கிய 60 வயது முதியவர்.. போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு..!

அண்ணாமலை திறமையை தேசிய அளவில் பயன்படுத்துவோம்: அமித்ஷாவின் ட்வீட்..!

ஈபிஎஸ் தலைமையில் கூட்டணி.. அதிகாரபூர்வமாக அறிவித்த அமித்ஷா..!

பணத்தை நான் தான் திருடினேன்.. 6 மாதத்தில் திருப்பி கொடுத்துவிடுவேன்: திருடன் எழுதிய கடிதம்..!

அமித்ஷாவை சந்தித்தே ஆக வேண்டும்: ஆட்டோவில் வந்த அகோரியால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments