Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவின் முதல் கார்ப்ரேட் ரயில் தொடங்கியது…

Arun Prasath
வெள்ளி, 4 அக்டோபர் 2019 (17:12 IST)
லக்னோ முதல் டெல்லி வரையிலான இந்தியாவின் முதல் கார்ப்ரேட் ரயில் தொடக்கம்.

500 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நகரங்களை இணைக்கும் வகையில், தனியார் ரயில்கள் விடப்படும் என மத்திய அரசு தெரிவித்து வந்தது. அதன் படி, டெல்லி-லக்னோ. மும்பை-ஷீரடி, சென்னை-பெங்களூர், திருவனந்தபுரம்-கண்ணூர், மும்பை-அகமதாபாத் ஆகிய வழித்தடங்களில் தனியார் ரயில்கள் விடப்படும் என அறிவித்தது.

இந்நிலையில் இதன் முதன் முயற்சியாக லக்னோ முதல் புதுடெல்லி வரையிலான இந்தியாவின் முதல் கார்பரேட் ரயிலை உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கொடியசைத்து தொடங்கி வைத்தார். முதல் பயணமாக 389 பயணிகள் பயணம் செய்தனர் என கூறப்படுகிறது.

இந்த ரயில் காலை 6.10 மணிக்கு லக்னோவிலிருந்து புறப்பட்டு 12.25 புது டெல்லிக்கு சென்றடையும், அதே போல் மீண்டும் புது டெல்லியிலிருந்து மாலை 3.35 மணிக்கு புறப்பட்டு இரவு 10.05 மணிக்கு லக்னோ சென்றடையும் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வீடுகளில் அடுப்பு எரிய வேண்டுமா? அல்லது வயிறு எரிய வேண்டுமா? காஸ் விலை உயர்வுக்கு முதல்வர் கண்டனம்..!

Farewell மேடையில் பேசும்போது மாரடைப்பு! 20 வயது பெண் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

அந்த தியாகி யார்? உங்களால் ஏமாற்றப்பட்ட ஓபிஎஸ்ஸும், தினகரனும்தான்! - எடப்பாடியாருக்கு அமைச்சர் பதில்!

அதிபர் டிரம்புக்கு எதிராக வெடித்தது மக்கள் போராட்டம்.. பதவி விலக வலியுறுத்தி முழக்கம்..!

சிலிண்டர் விலை உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும்: செல்வப்பெருந்தகை..!

அடுத்த கட்டுரையில்
Show comments