Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்னொரு வாய்ப்பு வேண்டுமா பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க...?

Webdunia
திங்கள், 1 ஏப்ரல் 2019 (09:57 IST)
மத்திய அரசு பான் கார்ட்டை ஆதார் எண்ணுடன் இணைக்க 2019 மார்ச் 31 தேதி வரை அவகாசம் அளித்திருந்தது. நேற்றோடு தேதி முடிந்தும் இன்னும் பலர் பான் எண்ணுடன் ஆதாரை இணைத்ததாக தெரிவில்லை. 
 
எனவே, பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்காதவர்களுக்கு மேலும் ஒரு வாய்ப்பை வருமான வரித்துறை வழங்கியுள்ளது. ஆம், இந்த கால அவகாசம் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.  
 
அதாவது, இந்த ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் இவற்றை இணைக்க வேண்டும் என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்துள்ளது. மேலும், இன்று முதல் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஆதார் கட்டாயம் எனவும் கூறப்பட்டுள்ளது.
பான் மற்றும் ஆதாரை இணைக்காவிட்டால் என்னவாகும்? 
1. பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்காதவர்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய முடியாது. 
2. வருமான வரி பிடித்தத்தை திரும்பப் பெறவும் முடியாது. 
3. வங்கிக் கணக்கு தொடங்குவது போன்ற பல தேவைகளுக்கு பான் கார்ட் முக்கிய ஆவணம் எனவே, வங்கிகளிலும் சிக்கல் ஏற்படும். 
 
பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டுமானால் வருமான வரித்துறையின் https://www.incometaxindiaefiling.gov.in/home என்ற இணையபக்கத்திற்கு சென்று இணைக்கவும். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு ஊழியர்கள் CHATGPT, DeepSeek ஏஐ பயன்படுத்த கூடாது: மத்திய நிதி அமைச்சகம் தடை

தொங்கு சட்டசபை ஏற்பட்டால் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவு இல்லை: காங்கிரஸ் அறிவிப்பு..!

கடன் வாங்கியது ரூ.6000 கோடி.. வங்கிகள் வசூலித்தது ரூ.14000 கோடி.. விஜய் மல்லையா வழக்கு..!

18 ஊழியர்களை திடீரென நீக்கிய திருப்பதி தேவஸ்தானம்.. என்ன காரணம்?

டெல்லியில் நடைபெறும் திமுக ஆர்ப்பாட்டம்.. ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் பங்கேற்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments