பிரபல தொழிற்சாலையில் வருமான வரி சோதனை.! வரி ஏய்ப்பு புகாரில் அதிரடி நடவடிக்கை..!!

Senthil Velan
வெள்ளி, 2 பிப்ரவரி 2024 (16:50 IST)
புதுச்சேரியில் பிரபல தோல் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை நிறுவனத்திற்கு சொந்தமான 8-க்கும் மேற்பட்ட இடங்களில் 25க்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
 
புதுச்சேரியில் பிரபல தொழிலதிபர் திலீப் கபூருக்கு சொந்தமான தோல் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒதியம்பட்டில் உள்ளது. இதை தலைமையிடமாக கொண்டு புதுச்சேரி நகரப்பகுதிகள் மற்றும் அனைத்து விமான நிலையங்களிலும் கைபை, காலனி, ஷூ, பெல்ட், பர்ஸ் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
 
இந்நிலையில் இன்று காலை ஒதியம்பட்டு மற்றும் அரியாங்குப்பத்தில் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் புதுச்சேரி நகரில் மிஷன் வீதியில் நான்கு கடைகள், கடற்கரையில் உள்ள பிரபல நட்சத்திர விடுதி உள்ளிட்ட 8 க்கும் மேற்பட்ட இடங்களில்  25க்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ALSO READ: அரசியல் கட்சி தொடங்கினார் விஜய்..!. தமிழகம் முழுவதும் விஜய் மக்கள் இயக்கத்தினர் கொண்டாட்டம்..!!
 
மேலும் வருமான வரித்துறைக்கு உரிய வருமானத்தை காட்டாமல் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வந்த புகாரை தொடர்ந்து இந்த தீவிர சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

26 வயது விமான பணிப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 60 வயது விமானி.. காவல்துறை வழக்குப்பதிவு..!

100 அடி பள்ளத்தில் பாய்ந்த கார்.. 4 ஐயப்ப பக்தர்கள் சம்பவ இடத்திலேயே பலி..!

பணியிட மாறுதல் அச்சம்: முதல்வர் தொகுதியில் பெண் அதிகாரி தற்கொலை முயற்சி..!

அமமுக இடம்பெறும் கூட்டணி நிச்சயமாக வெற்றி பெறும்: டிடிவி தினகரன்

பல அலுவலர்களுக்கு SIR செயலியை இயக்க தெரியவில்லை.. செல்லூர் ராஜூ குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments