Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல தொழிற்சாலையில் வருமான வரி சோதனை.! வரி ஏய்ப்பு புகாரில் அதிரடி நடவடிக்கை..!!

Senthil Velan
வெள்ளி, 2 பிப்ரவரி 2024 (16:50 IST)
புதுச்சேரியில் பிரபல தோல் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை நிறுவனத்திற்கு சொந்தமான 8-க்கும் மேற்பட்ட இடங்களில் 25க்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
 
புதுச்சேரியில் பிரபல தொழிலதிபர் திலீப் கபூருக்கு சொந்தமான தோல் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒதியம்பட்டில் உள்ளது. இதை தலைமையிடமாக கொண்டு புதுச்சேரி நகரப்பகுதிகள் மற்றும் அனைத்து விமான நிலையங்களிலும் கைபை, காலனி, ஷூ, பெல்ட், பர்ஸ் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
 
இந்நிலையில் இன்று காலை ஒதியம்பட்டு மற்றும் அரியாங்குப்பத்தில் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் புதுச்சேரி நகரில் மிஷன் வீதியில் நான்கு கடைகள், கடற்கரையில் உள்ள பிரபல நட்சத்திர விடுதி உள்ளிட்ட 8 க்கும் மேற்பட்ட இடங்களில்  25க்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ALSO READ: அரசியல் கட்சி தொடங்கினார் விஜய்..!. தமிழகம் முழுவதும் விஜய் மக்கள் இயக்கத்தினர் கொண்டாட்டம்..!!
 
மேலும் வருமான வரித்துறைக்கு உரிய வருமானத்தை காட்டாமல் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வந்த புகாரை தொடர்ந்து இந்த தீவிர சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துரோகி என்ற வார்த்தையை வாபஸ் பெற வேண்டும்.! அண்ணாமலைக்கு ஆர்.பி உதயகுமார் எச்சரிக்கை..!!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இவர்கள்தான் உண்மையான குற்றவாளியா?... பயமா இருக்கு- அனிதா சம்பத் வெளியிட்ட வீடியோ!

ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு உளவுத்துறையின் மெத்தனப் போக்கே காரணம்: பகுஜன் சமாஜ்வாதி கட்சி

பாமக பிரமுகருக்கு சரமாரி அரிவாள் வெட்டு ..பதற்றத்தில் கடலூர் மாவட்டம்..!

ஜூலை 23-ல் மத்திய பட்ஜெட் தாக்கல்.! 7-வது முறையாக தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments