Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

புதிய தேசிய கல்வி கொள்கையை அமுல்படுத்துங்கள்.! முதல்வர் ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் வலியுறுத்தல்..!

Stalin

Senthil Velan

, திங்கள், 9 செப்டம்பர் 2024 (17:32 IST)
அரசியல் ஆதாயத்தை தவிர்த்துவிட்டு மாணவர்களின் நலனை முன்னிறுத்தி புதிய தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் வலியுறுத்தி உள்ளார்.

மாநில கல்வித்துறைக்கு மத்திய அரசு உரிய நிதி வழங்காதது குறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வளைதள பக்கத்தில் கண்டன பதிவிட்டிருந்தார். அதில், ''தேசிய கல்விக் கொள்கைக்கு தலைவணங்க மறுத்ததற்காக சிறப்பாகச் செயல்படும் மாநிலங்களுக்கு கல்விக்கான நிதியை பாஜக மறுக்கிறது என்று குற்றம் சாட்டியிருந்தார்.
 
அதே நேரத்தில் கல்வியில் குறிப்பிட்ட இலக்கை அடையாதவர்களுக்கு தாராளமாக நிதியை அளிக்கிறது என்றும் தரமான கல்வி மற்றும் சமத்துவத்தை மேம்படுத்த மத்திய பாஜக அரசின் திட்டம் இதுதானா? என்றும் முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பி இருந்தார்.
 
இதற்கு பதில் அளித்துள்ள மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், ஜனநாயகத்தில் மாநிலங்களுக்கு இடையே ஆரோக்கியமான போட்டி எப்போதும் வரவேற்கத்தக்கது என்று குறிப்பிட்டுள்ளார். தேசிய கல்விக்கொள்கைக்கு உங்கள் கொள்கை ரீதியான எதிர்ப்பில் சில கேள்விகளை அமைச்சர் எழுப்பி உள்ளார்.
 
தமிழ் உள்ளிட்ட தாய்மொழியில் கல்வி கற்பதை எதிர்க்கிறீர்களா?, தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் தேர்வு நடத்துவதை எதிர்க்கிறீர்களா?, தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் பாடப்புத்தகங்கள் மற்றும் உள்ளடக்கம் உருவாக்கப்படுவதை நீங்கள் எதிர்க்கிறீர்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

 
தேசிய கல்விக் கொள்கையின் முழுமையான, சமமான மற்றும் உள்ளடக்கிய கட்டமைப்பை நீங்கள் எதிர்க்கிறீர்களா? என்றும் அப்படி இல்லாவிட்டால், அரசியல் ஆதாயத்தை தவிர்த்துவிட்டு மாணவர்களின் நலனை முன்னிறுத்தி புதிய தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலினை மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் வலியுறுத்தி உள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புத்தக கண்காட்சி சிறப்பு பேச்சாளர்கள்.. விஜய் டிவி ராமர் பெயர் திடீர் நீக்கம்..!