Webdunia - Bharat's app for daily news and videos

Install App

40 கோடி பேருக்கு தொற்று ஏற்படும் அபாயம்: எச்சரிக்கும் ஐசிஎம்ஆர்!

Webdunia
புதன், 21 ஜூலை 2021 (08:22 IST)
இந்தியா முழுவதும் 40 கோடி பேருக்கு தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 1 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 50 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது.
 
அதாவது, இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை பரவல் குறைந்து வரும் நிலையில் மூன்றாவது அலை பரவ வாய்ப்புள்ளதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். அந்த வகையில், மூன்றில் இரு பங்கு இந்தியர்களுக்கு உடலில் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி விட்டதாகவும், மீதமுள்ள 40 கோடி பேருக்கு தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. 
 
அதாவது சுமார் 80 கோடி பேருக்கு நோய் எதிர்ப்பு திறன் ஏற்பட்டிருப்பதாகவும் மீதமுள்ள 40 கோடி பேருக்கு எதிர்ப்புத் திறன் இல்லாததால் தொற்று அபாயம் உள்ளதாகவும் ஐசிஎம்ஆர் தரப்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments