காலை வாறியதா ரேபிட் கிட் சோதனை? – சோதனையை நிறுத்த அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 21 ஏப்ரல் 2020 (16:39 IST)
கொரோனா சோதனைகளுக்காக பயன்படுத்தப்படும் ரேபிட் கருவிகள் தவறான முடிவுகளை காட்டுவதால் அடுத்த இரண்டு நாட்களுக்கு ரேபிட் சோதனையை நிறுத்த இந்திய மருத்துவ கவுன்சில் அறிவுறுத்தியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. மக்களுக்கு கொரோனா பாதிப்பு உள்ளதா என்பதை கண்டறிய ரேபிட் பரிசோதனை கருவிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்காக லட்சக்கணக்கில் ரேபிட் கருவிகள் சீனாவிலிருந்து வாங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் ரேபிட் கருவிகளின் முடிவுகள் மாறுபட்டதாக இருப்பதாக ராஜஸ்தான், மேற்கு வங்க மாநிலங்கள் குற்றம் சாட்டியுள்ளன. 2% முதல் 78% வரை தவறான முடிவுகளை ரேபிட் கிட் காட்டுவதாக வெளியான தகவலை அடுத்து ராஜஸ்தானில் ரேபிட் கிட் சோதனை நிறுத்தப்பட்டது. அதை தொடர்ந்து இந்தியா முழுவதும் இரண்டு நாட்களுக்கு ரேபிட் கிட் பரிசோதனைகளை நிறுத்தி வைக்குமாறு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. மீண்டும் ரேபிட் கிட பயன்படுத்துவது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன்? தவெக நிர்வாகி கருத்து..!

பாமக நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.. தவெகவுக்கு நேரில் சென்று அழைப்பு..!

விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி.. தவெக தீர்மானம்..!

எதிர்பார்த்தபடியே SIR படிவம் சமர்பிக்க அவகாசம் நீட்டிப்பு! எத்தனை நாட்கள்?

ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை விட்டுக்கு அழைத்து சென்ற இளைஞர்.. பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments