Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காலை வாறியதா ரேபிட் கிட் சோதனை? – சோதனையை நிறுத்த அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 21 ஏப்ரல் 2020 (16:39 IST)
கொரோனா சோதனைகளுக்காக பயன்படுத்தப்படும் ரேபிட் கருவிகள் தவறான முடிவுகளை காட்டுவதால் அடுத்த இரண்டு நாட்களுக்கு ரேபிட் சோதனையை நிறுத்த இந்திய மருத்துவ கவுன்சில் அறிவுறுத்தியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. மக்களுக்கு கொரோனா பாதிப்பு உள்ளதா என்பதை கண்டறிய ரேபிட் பரிசோதனை கருவிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்காக லட்சக்கணக்கில் ரேபிட் கருவிகள் சீனாவிலிருந்து வாங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் ரேபிட் கருவிகளின் முடிவுகள் மாறுபட்டதாக இருப்பதாக ராஜஸ்தான், மேற்கு வங்க மாநிலங்கள் குற்றம் சாட்டியுள்ளன. 2% முதல் 78% வரை தவறான முடிவுகளை ரேபிட் கிட் காட்டுவதாக வெளியான தகவலை அடுத்து ராஜஸ்தானில் ரேபிட் கிட் சோதனை நிறுத்தப்பட்டது. அதை தொடர்ந்து இந்தியா முழுவதும் இரண்டு நாட்களுக்கு ரேபிட் கிட் பரிசோதனைகளை நிறுத்தி வைக்குமாறு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. மீண்டும் ரேபிட் கிட பயன்படுத்துவது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜேஇஇ 2-ம் கட்ட முதன்மைத் தோ்வு முடிவுகள் வெளியீடு! 100% மதிப்பெண் பெற்றவர்கள் எத்தனை பேர்?

இனிமேல் குளுகுளுவென பயணம் செய்யலாம்.. சென்னையின் முதல் ஏசி மின்சார ரயி தொடக்கம்..

குஷ்புவின் எக்ஸ் பக்கத்தில் புகுந்து விளையாடிய ஹேக்கர்ஸ்.. அதிர்ச்சி தகவல்..!

’இன்று விடுமுறை’.. அதிமுக - பாஜக கூட்டணி குறித்து ஓபிஎஸ் கமெண்ட்..!

முதல்வர் மருந்தகத்தில் மருந்துகள் பற்றாக்குறையா? அமைச்சர் மா சுப்பிரமணியன் பதில்..!

அடுத்த கட்டுரையில்
Show comments