Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நவம்பரில் கொரோனா உச்சமா? அது போலி செய்தி! – ஐசிஎம்ஆர் மறுப்பு

Webdunia
திங்கள், 15 ஜூன் 2020 (13:01 IST)
இந்தியாவில் நவம்பர் மாதத்தில் கொரோனா உச்சம் அடையும் என ஐ.சி.எம்.ஆர் கூறியதாக வெளியான தகவல் போலியானது என இந்திய மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. தற்போது உலக அளவில் அளவில் அதிமான கொரோனா பாதிப்புகளை கொண்ட நாடுகளில் இந்தியா ஐந்தாவது இடத்தில் உள்ளது. இந்நிலையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நடத்திய ஆய்வில் நவம்பர் மாதத்தில் இந்தியாவில் கொரோனா உச்சத்தை அடையும் என தெரிவித்ததாக செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் சமூக வலைதளங்களில் வெளியாகி வரும் இந்த தகவலை இந்திய மருத்துவ கவுன்சில் மறுத்துள்ளது. ஐஎம்சிஆர் மேற்கண்டவாறு எந்த ஆய்வுகளையும் செய்யவில்லை என்றும், மருத்துவ கவுன்சிலால் வெளியிடப்பட்டதாக சமூக வலைதளங்களில் பரவும் தகவல்கள் போலியானவை என்றும் மருத்துவ கவுன்சில் விளக்கம் அளித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments