Publish Date: Thu, 22 Oct 2020 (12:05 IST)
Updated Date: Thu, 22 Oct 2020 (12:16 IST)
கொரோனா சோதனையை ஒருமணி நேரத்தில் அறிந்துகொள்ளும் விதமாக உருவாக்கப்பட்டுள்ள கோவிராப் கருவிக்கு ஐஎம்சிஆர் அனுமதி வழங்கியுள்ள்ளது.
கரக்பூர் ஐஐடி.யைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் "கோவிராப்" என்ற இந்த கருவியை தயாரித்துள்ளனர். இந்த கருவியின் மூலம் குறைந்த செலவில் எளிமையான முறையில் கொரோனா சோதனை மேற்கொள்ளப்படும். மேலும் சோதனை முடிவுகளை ஒரே மணிநேரத்தில் செயலியின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
இதற்கு இப்போது ஐஎம்சிஆர் அனுமதி வழங்கியுள்ளது.