கேரளாவில் மருத்துவ அவசர நிலை பிரகடனம்?

Webdunia
புதன், 30 செப்டம்பர் 2020 (09:39 IST)
கேரளாவில் மருத்துவ அவசர நிலையை பிறப்பிக்க வேண்டும் என இந்திய மருத்துவ சங்கம் கோரிக்கை.
 
இந்தியாவிலேயே முதன்முதலாக கேரளாவில் தான் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது என்றாலும் கேரள முதல்வர் மற்றும் கேரளா சுகாதாரத்துறையினர் அதிரடி நடவடிக்கையின் காரணமாக கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு மிகவும் கட்டுப்படுத்தப்பட்டது. 
 
ஆனால் கடந்த சில வாரங்களாக அம்மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. ஆம். கேரளாவில் கடந்த 28 நாட்களில் மட்டும் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். 
 
இது தொடர்பாக இந்திய மருத்துவ சங்கத்தின் கேரள மாநில கிளை பிரநிதிகள் அம்மாநில முதல்வருக்கு எச்சரிக்கை கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.  அதில், மாநிலத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு அச்சுறுத்தும் நிலையை எட்டியிருக்கிறது. 
 
இப்படியே போனால் வருகிற நாட்களில் தினசரி பாதிப்பு 10 ஆயிரத்தை கடந்து விடும். எனவே இந்த சமூக பரவலை கட்டுப்படுத்த மருத்துவ அவசர நிலையை பிறப்பிக்க வேண்டும் என அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மாதமாக டிஜிட்டல் அரெஸ்டில் இருந்து பெண் மென்பொருள் பொறியாளர்.. ரூ.32 கோடி இழப்பு..!

தென்மேற்கு வங்கக்கடலில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. கனமழை எச்சரிக்கை..!

முதல்வர் ஸ்டாலின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. 13 திரையுலக பிரபலங்கள் வீடுகளுக்கும் மிரட்டல்..!

தமிழகத்தில் தேர்தல் பணிகள் முடக்கம்: வாக்காளர் பட்டியல் திருத்த பணியை புறக்கணிக்க வருவாய்த்துறை முடிவு!

லாலு பிரசாத் யாதவ் வீட்டில் குடும்ப சண்டை.. வீட்டை விட்டு வெளியேறிய 4 மகள்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments