Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றால் ’அதை ரத்து ’செய்யனும்... யோகா குரு ராம்தேவ் பேச்சு

இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றால் ’அதை ரத்து ’செய்யனும்... யோகா குரு ராம்தேவ் பேச்சு
, வியாழன், 24 ஜனவரி 2019 (15:57 IST)
இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றால் அவர்களுக்கு தேர்தலில் வாக்களிக்கும் உரிமையை ரத்து செய்ய வேண்டும் என யோகா குரு ராம்தேவ் பேசியுள்ளது கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
யோகாகுரு ராம்தேவ் கூறியுள்ளதாவது :
 
தேசத்தில் வளர்ந்து வரும் மக்கள் தொகை வளர்ந்து வருகிறது. இந்துவோ , முஸ்லிமோ  2 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்ளக்கூடாது. அப்படி 2 குழந்தைக்கு மேல் பெற்றுக்கொள்பவர்களுக்கு ஓட்டுநர் உரிமம், அரசு வேலை, அரசு மருத்துவ வசதிகளை எல்லாம் பறுமுதல் செய்ய வேண்டும்.  அவர்களை தேர்தலில் போட்டியிட அனுமதிக்கக்கூடாது. எந்த சலுகையும் அரசு அளிக்கக்கூடாது அப்படி செய்தால்தான் நாட்டில் மக்கள் தொகையை கட்டுப்படுத்த முடியும் இவ்வாறு அவர் தெரிவித்தார்.
 

 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எல்லோருக்கும் ஒரு வேலை; எனக்கு இரண்டு வேலை: அப்படி என்ன வேலை ஸ்டாலினுக்கு?