Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிச்சை எடுப்பதும் ஒரு வேலைவாய்ப்புதானா? மோடிக்கு ப.சிதம்பரம் கேள்வி

Webdunia
திங்கள், 29 ஜனவரி 2018 (01:33 IST)
சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த பிரதமர் மோடி, '“ பக்கோடா விற்பனை செய்யும் ஒரு நபர் வீட்டிற்கு ரூ.200 கொண்டு சென்றால் அதனை வேலைவாய்ப்பாக கருத வேண்டுமா, இல்லையா?, என்று கூறியிருந்தார்.

இதற்கு தனது டுவிட்டரில் பதில் கூறிய ப.சிதம்பரம், 'பக்கோடா விற்பனை செய்வதை பிரதமர் வேலைவாய்ப்பு என்று கூறினால், பிச்சையெடுப்பது கூட வேலைதான். ஏழ்மை அல்லது முடியாமை காரணமாக வாழ்க்கைக்காக பிச்சையெடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டவர்களையும் ‘வேலை வழங்கப்பட்டவர்களாக’ என எண்ணிக்கையை தொடங்குங்கள்,” என்று கூறியுள்ளார்.

அரசு வேலை வாய்ப்பை உருவாக்குவதற்கு, சுயவேலை வாய்ப்பினை இளைஞர்கள் தேடி கொள்வதற்கும் வித்தியாசம் இருப்பதாக கூறிப ப.சிதம்பரம், 'வேலைவாய்ப்பு' மற்றும் 'சுய வேலைவாய்ப்புக்கு' இடையே இடைவேளியை கொண்டிருக்க வேண்டியது முக்கியமானது என்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம் என்பது வழக்கமானது மற்றும் நியாயமான பாதுகாப்பானது என்றும் கூறினார்.  இதுபோன்று எவ்வளவு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டு உள்ளது என தெரிந்துக்கொள்ள விரும்புகிறோம் என்று கூறியுள்ளார்.

பிரதமரின் இந்த கருத்து குறித்து குஜராத்தின் ஹர்திக் பட்டேல் கூறுகையில் “டீக்கடைக்காரர் இப்படிதான் பேசுவார், பக்கோடா கடை வைப்பதையும் அவர்கள் வேலைவாய்ப்பு உருவாக்கிவிட்டதாக கருதுவார்கள். நிச்சயமாக பொருளாதாரம் குறித்து எதுவும் தெரியாமலே இருக்கிறார்,” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மணிப்பூரில் அமைதி ஒப்பந்தம்: குகி அமைப்பு, மாநில, மத்திய அரசுகளிடையே முத்தரப்பு ஒப்பந்தம் கையெழுத்து

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப அவகாசம் நீட்டிப்பு.. அமைச்சர் தகவல்..!

மன்னிப்பு கேட்பது போல பாலியல் சீண்டல்.. பெண் கவுன்சிலர் புகார்

இந்தியாவின் சிறந்த 100 கல்வி நிறுவனங்களில் தமிழகம் முதலிடம்!

ஜிஎஸ்டி சீரமைப்பை வரவேற்கிறோம்.. ஆனால் அதே நேரத்தில்... தங்கம் தென்னரசு

அடுத்த கட்டுரையில்
Show comments