Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சசிகலா என் கண்ணில் சிக்கியிருந்தால் அவ்ளோ தான்: ரூபா பரபரப்பு பேட்டி!

சசிகலா என் கண்ணில் சிக்கியிருந்தால் அவ்ளோ தான்: ரூபா பரபரப்பு பேட்டி!

சசிகலா என் கண்ணில் சிக்கியிருந்தால் அவ்ளோ தான்: ரூபா பரபரப்பு பேட்டி!
, சனி, 22 ஜூலை 2017 (13:08 IST)
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு எதிராக டிஐஜி ரூபா வெளியிட்டு வரும் தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.


 
 
ரூபா வேறு துறைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டாலும் சசிகலா விவகாரத்தில் அவருடைய அதிரடி தொடர்ந்து தான் வருகிறது. இந்நிலையில் சசிகலா சிறையில் தங்காமல், சிறைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்ததாக உறுதி செய்யப்படாத தகவல்கள் பரவின.
 
இந்நிலையில் இந்த தகவல் குறித்து டிஐஜி ரூபாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த ரூபா, நான் சிறைத்துறை டிஐஜியாக இருந்தபோது, சசிகலா சிறையில் இல்லாமல், சிறைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இருப்பதாக எனக்கு தகவல் கிடைத்தது.
 
இது குறித்து நான் விசாரித்த போது மேலதிகாரிகள் சரியாக பதில் கூறாததால் நானே களத்தில் இறங்கி நேரடியாக கண்டுபிடிக்க முயற்சி செய்தேன். ஆனால் நான் முயற்சிப்பதை யாரோ அவருக்கு தகவல் சொல்லி அவரை காப்பாற்றி விட்டனர்.
 
இதனால் அவர் என் கண்ணில் மாட்டவில்லை. அப்படி அவர் வெளியில் சென்றபோது என் கண்ணில் மாட்டியிருந்தால் நான் எடுக்கும் நடவடிக்கை பயங்கரமாக இருந்திருக்கும் என ரூபா தெரிவித்தார். மேலும் சசிகலா சிறையில் ஆப்பில் ஐபோன் உபயோகித்ததாகவும் கூறப்படுகிறது அதையும் கண்டுபிடிக்க முடியவில்லை என ரூபா கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

54 ரூபாயில் ஜியோ கேபிள் டிவி: கதறும் போட்டி நிறுவனங்கள்!!