Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சோனியா, ராகுல் மீது ஏவுகணை வீசியிருப்பேன்..? – குலாம் நபி ஆசாத் பேச்சு!

Webdunia
வெள்ளி, 9 செப்டம்பர் 2022 (11:10 IST)
காங்கிரஸிலிருந்து விலகிய குலாம் நபி ஆசாத் ராகுல்காந்தி, சோனியா காந்தியை தாக்கி பேசுவது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர்களில் முக்கியமானவரும், முன்னாள் ஜம்மு காஷ்மீர் முதல்வருமான குலாம் நபி ஆசாத் காங்கிரஸின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகியதிலிருந்து பிரதமர் மோடி குறித்து நல்ல விதமாக பேசி வரும் குலாம் நபி ஆசாத், தொடர்ந்து சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை விமர்சித்தும் வருகிறார்.

இந்நிலையில் தான் இவ்வாறாக விமர்சிப்பது குறித்து விளக்கமளித்து பேசியுள்ள குலாம் நபி ஆசாத் “சோனியாகாந்தி மற்றும் ராகுல் காந்திக்கு எதிராக ஏன் பேசுகிறீர்கள் என சிலர் கேட்கிறார்கள். கட்சியிலிருந்து விலகியபோது சோனியா காந்திக்கு கடிதம் எழுதிவிட்டு 3 நாட்கள் காத்திருந்தேன். நான் அவர்கள் பற்றி எதுவுமே பேசவில்லை. மாறாக அவர்கள் என்மீது ஏவுகணைகளை வீசினார்கள்.

அவர்கள் தாக்கும்போது நான் சும்மா இருக்க முடியாது. அவை சுட்டு அழிக்கப்பட்டன. பதிலுக்கு நான் ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவியிருந்தால் அவர்கள் காணாமல் போயிருப்பார்கள்” என்று பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

மாமியாருடன் குடும்பம் நடத்தும் மருமகன்.. காவல்துறையில் மாமனார் அளித்த புகார்.

திருடர்கள் என்ற பழியை தமிழ்நாட்டு மக்கள் மீது பிரதமர் சுமத்தலாமா.? முதல்வர் மு.க ஸ்டாலின் கண்டனம்..!!

நான் பார்த்து ரசித்து நெகிழ்ந்த இளம் தலைவர் ராகுல்காந்தி: செல்லூர் ராஜு

கோயம்பேட்டில் பசுமைப் பூங்கா அமைக்க வேண்டும்..! முதல்வருக்கு அன்புமணி ராமதாஸ் கடிதம்.!!

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மறைவு எதிரொலி.. அதிபர் தேர்தல் நடத்த திட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments