Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹலோ நான் திருடன் இல்லை, அவசரத்திற்கு பணம் எடுத்திருக்கிறேன் - திருடனின் கடிதம்

Webdunia
வெள்ளி, 3 ஆகஸ்ட் 2018 (13:17 IST)
கேரளாவில் திருடன் ஒருவன் பணத்தை திருடிவிட்டு, அந்த வீட்டில் நான் திருடன் இல்லை, அவசரத்திற்கு பணம் எடுத்திருக்கிறேன் விரைவில் கொடுத்துவிடுவேன் என எழுதிவிட்டு சென்றுள்ளான்.
கேரளாவில் உடினூர் பகுதியை சேர்ந்த முனீரா என்பவர் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றுள்ளார். சற்று நேரத்தில் வீடு திரும்பிய அவருக்கு பேரதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது.
 
வீட்டிலிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 2 சவரன் நகையும் 30 ஆயிரம் ரூபாயும் திருடப்பட்டிருந்தது. அத்தோடு பணத்தை திருடிய திருடன் வீட்டின் சுவரில் நான் திருடன் இல்லை, அவசரத்திற்கு பணம் எடுத்திருக்கிறேன் விரைவில் கண்டிப்பாக திருப்பி தந்துவிடுவேன் என எழுதிவிட்டு சென்றுள்ளான்.
 
இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீஸார் அந்த திருடனை தேடி வருகின்றனர்.
இதேபோல் கேரளாவில் சமீபத்தில் திருடன் ஒருவன் திருடிய நகைகளை மனம்திருந்தி திருடிய நபரிடமே ஒப்படைத்தான்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிமுக என்ற இயக்கத்தை ரெய்டுகள் அசைத்து கூட பார்க்க முடியாது: ஈபிஎஸ்

அரசு ஊழியர்களை அமலாக்கத்துறை துன்புறுத்துகிறது: அமைச்சர் முத்துசாமி கண்டனம்..!

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த கல்லூரி மாணவர் கைது.. ரகசிய தகவல் பரிமாறப்பட்டதா?

தமிழகத்தின் 14 மாவட்டங்களின் இன்று கனமழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

ராயல் என்ஃபீல்டு அறிமுகம் செய்யும் முதல் மின்சார பைக்.. முழு விவரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments