Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ப்ளாஸ்மா தானம் வேணுமா.. நான் தரேன்! – 200 பேரை ஏமாற்றிய பலே ஆசாமி!

Webdunia
செவ்வாய், 21 ஜூலை 2020 (12:00 IST)
தெலுங்கானாவில் கொரோனா பாதித்தவர்களுக்கு ப்ளாஸ்மா தானம் தருவதாக பலரை ஏமாற்றிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் கொரோனா சிகிச்சைக்கு ப்ளாஸ்மா தானம் நல்ல பலனளிப்பதாக பலர் கூறி வருகின்றனர். மத்திய மற்றும் மாநில அரசுகளும் கொரோனாவிலிருந்து மீண்டவர்களை ப்ளாஸ்மா தானம் செய்ய வலியுறுத்தி வருகிறார்கள். இந்நிலையில் இதை வைத்து சிலர் மோசடி சம்பவங்களிலும் ஈடுபட்டிருப்பதாக தெரிகிறது.

தெலுங்கான மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு ப்ளாஸ்மா தானம் செய்வதாக முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அதை நம்பி கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவரது குடும்பங்கள் இளைஞரை அணுக அவர் ப்ளாஸ்மா தானம் செய்ய பணம் கேட்டுள்ளார். சிலர் பணம் அளித்த நிலையில் அத்துடன் அவர்களது தொடர்பை துண்டித்துக் கொண்டு தப்பியுள்ளார். பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை மேற்கொண்ட போலீஸார் அந்த இளைஞரை கைது செய்துள்ளனர். மேலும் இதுபோன்று யாராவது ப்ளாஸ்மா தானம் செய்வதாக பணம் கேட்டால் மக்கள் காவல்நிலையத்தை தொடர்பு கொள்ளவும் தெலுங்கானா போலீஸ் அறிவுறுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

270 கிலோ தங்கக் கடத்தல் வழக்கில் திடுக்கிடும் திருப்பம்.. சென்னை விமான நிலையத்தில் என்ன நடந்தது?

LLB சட்டப்படிப்புக்கு விண்ணப்பம்.. வெளியானது முக்கிய அறிவிப்பு..!

இந்துக்களிடம் ராகுல் காந்தி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்: இந்து முன்னணி

ஆன்மீக நிகழ்ச்சி நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 116ஆக உயர்வு..எங்கு பார்த்தாலும் மரண ஓலம்..!

கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்கள்.. ஆணையத்தின் பணிகள் குறித்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments