Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் முதல்முறையாக ரோபோ போலீஸ்: லஞ்சம் ஒழிய வாய்ப்பு

Webdunia
சனி, 30 டிசம்பர் 2017 (04:41 IST)
உலகம் முழுவதும் அனைத்து பணிகளிலும் ரோபோவின் ஆதிக்கம் அதிகரித்து வரும் இந்தியாவிலும் ரோபோக்களை பயன்படுத்தும் பழக்கம் கடந்த சில ஆண்டுகளாக உள்ளது. சமீபத்தில் சென்னையில் உள்ள ஓட்டல் ஒன்றில் ரோபோ சர்வர் வேலை செய்ய ஆரம்பித்துள்ளது

இந்த நிலையில் இந்தியாவிலேயே முதன்முறையாக போலீஸ் துறையில் ரோபோ இணைக்கப்பட்டுள்ளது. தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் ரோபோ ஒன்று காவல்துறையில் பணிபுரிய அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.

ஹெச்-பாட்ஸ் என்ற நிறுவனம் தயாரித்துள்ள ரோபோவை தொழில்நுட்பத் துறை முதன்மைச் செயலா் ஜெயேஷ் ரஞ்சன் அறிமுகம் செய்தார். மனித உருவில் தயாராகியுள்ள இந்த ரோபோ, மனிதர்களை இனம் கண்டு அவர்கள் கொடுக்கும் புகார்களை பெற்றுக்கொள்ளும். இதில் சக்திவாய்ந்த கேமிரா, சென்சார்கள் உள்ளதால் இந்த ரோபோவை போக்குவரத்தை ஒழுங்கு செய்யவும் பயன்படுத்தலாம். இந்த ரோபோவில் விலை ரூ5 லட்சம் என்றும், இந்த ரோபோ லஞ்சம் கேட்காது என்பதால் நாட்டில் லஞ்ச ஒழிய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments