Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”கொரோனாவை அதிசய சக்தியால் குணப்படுத்துவேன்” – ஊரை ஏமாற்றிய ”கொரோனா பாபா” கைது

Webdunia
திங்கள், 27 ஜூலை 2020 (11:55 IST)
ஹைதராபாத்தில் கொரோனாவை அதிசய சக்தி மூலமாக குணப்படுத்துவதாக ஏமாற்றி வந்த “கொரோனா பாபா” கைது செய்யப்பட்டுள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் கொரோனாவுக்கு எதிரான மருந்துகளை கண்டுபிடிப்பதில் உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளது, இந்நிலையில் கொரோனாவை குணப்படுத்துவதாக விளம்பரம் செய்து மக்களை ஏமாற்றும் கூட்டமும் அதிகரித்து வருகிறது.

சமீபத்தில் ஹைதராபாத்தில் கொரோனாவை தனது அதிசய சக்திகள் மூலமாக ஒருவர் குணப்படுத்துவதாக வதந்திகள் வெளியானது. இதுகுறித்து பலருக்கும் வாட்ஸப் மூலமாக மெசேஜ் வந்ததாகவும் சொல்லப்படுகிறது. இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட போலீஸார் கொரோனாவை குணப்படுத்தும் “கொரோனா பாபா” என்று சொல்லி சுற்றித்திரிந்த ஆசாமியையும், அவரது உதவியாட்களையும் கைது செய்துள்ளனர். இவர்கள் கொரோனாவை குணமாக்குவதாக கூறி மக்களிடம் 30 ஆயிரம் வரை ஏமாற்றியிருப்பது தெரிய வந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

5 ரூபாய் லஞ்சம் வாங்கிய கணினி ஆபரேட்டர் .! இந்த வினோத சம்பவம் எங்கு தெரியுமா.?

காற்றாலை திட்டத்திற்கு எதிர்ப்பு.! அதானி நிறுவனத்திற்கு எதிராக இலங்கையில் வழக்கு!!

சிறுவன் உயிரிழந்ததன் எதிரொலி.! வனத்துறை வசம் செல்கிறது குற்றால அருவிகள்..!!

புது உச்சத்தை நோக்கி தங்கம் விலை.. ரூ.55000ஐ நெருங்கியது ஒரு சவரன் விலை..!

ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!

அடுத்த கட்டுரையில்
Show comments