Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹைதராபாத்தில் நடந்த எண்கவுன்டர் போலியானது! – உச்சநீதிமன்ற குழு அறிக்கை!

Webdunia
வெள்ளி, 20 மே 2022 (15:47 IST)
ஹைதராபாத்தில் கடந்த 2019ம் ஆண்டில் போலீஸ் நடத்திய எண்கவுண்டர் போலியானது என உச்சநீதிமன்ற குழு அறிக்கை அளித்துள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு ஹைதராபாத்தில் இளம்பெண் நான்கு பேரால் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்து கொல்லப்பட்ட சம்பவம் தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த வழக்கில் 3 மைனர் சிறுவர்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களை அழைத்து சென்றபோது தப்பி ஓடியதாக போலீஸ் நடத்திய எண்கவுண்டரில் 4 பேரும் கொல்லப்பட்டனர். இந்நிலையில் இந்த எண்கவுண்டர் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உச்சநீதிமன்றம் ஒரு சிறப்பு குழுவை அமைத்தது.

இந்த எண்கவுண்டர் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வந்த குழு, இந்த எண்கவுண்டர் போலியாக சித்தரித்து நடத்தப்பட்டதாக அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த அறிக்கை உயர்நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட பின் இதன் மீதான விசாரணை தொடங்கும் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மாவட்டங்களில் இன்று இரவு கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் எச்சரிக்கை..!

பதவியேற்பின்போது பாலஸ்தீனத்தை ஆதரித்து முழக்கம்.. ஒவைசி தகுதி நீக்கம் செய்யப்படுகிறாரா?

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் தலைமறைவு.. என்ன நடந்தது?

வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளை தடுக்க கூடாது: உச்சநீதிமன்றம் உத்தரவு..!

திமுகவும் இடைத்தேர்தலை புறக்கணித்துள்ளது: முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments