Webdunia - Bharat's app for daily news and videos

Install App

14 வயது சிறுமியை பணத்துக்காக விற்ற கணவன்

Webdunia
வியாழன், 28 ஜூலை 2016 (15:36 IST)
14 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்ட ஒருவர், அச்சிறுமியை வேறு ஒருவரிடம் ரூ.50 ஆயிரம் பணத்திற்கு விற்ற கொடுமை மும்பையில் நடந்துள்ளது.


 

 
உத்தரபிரதேச மாநிலத்தின் பனாரஸ் பகுதியை சேர்ந்த ஒரு 14 வயது சிறுமி, டில்லியில் உள்ள ஒரு அனாதை இல்லத்தில் வசித்து வந்தார். அந்த சிறுமியை அங்கிருந்த அழைத்து சென்ற உறவினர் ஒருவர், அவரை வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளார்.
 
அந்த சிறுமியை மும்பை அழைத்து வந்த கணவர், ஒரு வீட்டில் ரூ.50 ஆயிரம் பணத்திற்கு விற்றுவிட்டார். அந்த இடத்தில் வீட்டு வேலை செய்வதற்காக அந்த சிறுமியை அவர்களிடம் ஒப்படைத்துவிட்டார் என்பது சிறுமிக்கு பிறகுதான் தெரியவந்துள்ளது.
 
வேலை செய்ய மறுத்த அந்த சிறுமியை அவரின் கணவர் மற்றும் விலைக்கு வாங்கிய பெண்ணும் கடுமையாக தாக்கியுள்ளனர். அங்கிருந்து எப்படியோ தப்பித்து வந்த அந்த சிறுமி, இதுபற்றி போலீசாரிடம் புகார் கொடுத்தார்.
 
வீட்டு வேலை செய்து வந்த இடத்தின் அருகே வசிப்பர்கள் அறிவுரைப்படிதான் தான் போலீசாரிடம் புகார் கொடுத்ததாக அந்த சிறுமி கூறியுள்ளார்.
 
சிறுமியின் தலையில் சில காயங்கள் இருந்தன. எனவே போலீசார், அவரை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments