Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனைவிக்கு பதிலாக கவுன்சிலராக கணவர்கள். பதவியேற்பில் நடந்த கேலிக்கூத்து..!

Mahendran
புதன், 5 மார்ச் 2025 (19:16 IST)
சத்தீஸ்கர் மாநிலத்தில் சமீபத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் கிராம பஞ்சாயத்தில் 11 வார்டுகளில் ஆறு பெண்கள் வெற்றி பெற்றனர்.
 
அதன் பிறகு, பதவியேற்பு நிகழ்ச்சி நடந்தபோது, வெற்றி பெற்ற பெண் கவுன்சிலர்களுக்கு பதிலாக அவர்களின் கணவர்கள் பதவி ஏற்றனர். பஞ்சாயத்து செயலாளரும் அவர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
 
இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையாகியுள்ளது. மாவட்ட பஞ்சாயத்து செயல் அதிகாரி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள நிலையில், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
 
"வெற்றி பெற்றவர் ஒருவர், ஆனால் பதவி ஏற்றது வேறொருவரா?" என்ற கேள்வியை பொதுமக்கள் எழுப்பி வருகின்றனர்.
 
ஏற்கனவே தமிழகம் உள்பட பல மாநிலங்களில் பெண்கள் வெற்றி பெற்று பதவியேற்றாலும், அவர்களுடைய கணவர்கள் தான் அதிகாரம் செய்து வருவதாக கூறப்பட்டு வருகிறது.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

15 வயது சிறுமியிடம் 50 லட்ச ரூபாய் மோசடி.. மார்பிங் செய்து மிரட்டிய நண்பனின் சகோதரர்..

எந்த போராக இருந்தாலும் அமெரிக்காவுடன் மோத தயார்: சீனா அதிரடி அறிவிப்பு..!

பஞ்சாப் மாநிலத்தில் தியானம் செய்ய வந்த கெஜ்ரிவால்.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

அமைச்சர் பொன்முடி நேரில் ஆஜராக வேண்டும்: சிபிஐ நீதிமன்றம் உத்தரவு..!

கோவில் நிகழ்ச்சிகளில் சினிமா பாட்டுக்கு தடை! - நீதிமன்றம் உத்தரவு!

அடுத்த கட்டுரையில்
Show comments