மனைவிக்கு பதிலாக கவுன்சிலராக கணவர்கள். பதவியேற்பில் நடந்த கேலிக்கூத்து..!

Mahendran
புதன், 5 மார்ச் 2025 (19:16 IST)
சத்தீஸ்கர் மாநிலத்தில் சமீபத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் கிராம பஞ்சாயத்தில் 11 வார்டுகளில் ஆறு பெண்கள் வெற்றி பெற்றனர்.
 
அதன் பிறகு, பதவியேற்பு நிகழ்ச்சி நடந்தபோது, வெற்றி பெற்ற பெண் கவுன்சிலர்களுக்கு பதிலாக அவர்களின் கணவர்கள் பதவி ஏற்றனர். பஞ்சாயத்து செயலாளரும் அவர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
 
இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையாகியுள்ளது. மாவட்ட பஞ்சாயத்து செயல் அதிகாரி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள நிலையில், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
 
"வெற்றி பெற்றவர் ஒருவர், ஆனால் பதவி ஏற்றது வேறொருவரா?" என்ற கேள்வியை பொதுமக்கள் எழுப்பி வருகின்றனர்.
 
ஏற்கனவே தமிழகம் உள்பட பல மாநிலங்களில் பெண்கள் வெற்றி பெற்று பதவியேற்றாலும், அவர்களுடைய கணவர்கள் தான் அதிகாரம் செய்து வருவதாக கூறப்பட்டு வருகிறது.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விமான பணிப்பெண்கள் கொடுத்த உணவை சாப்பிட்ட மருத்துவர் பலி.. மூச்சுத்திணறல் என தகவல்..!

160 கிமீ வேகத்தில் செல்லலாம்! தாம்பரம் - செங்கல்பட்டு 4வது இருப்புப்பாதை! - ரயில்வே தீவிரம்!

குழந்தைகள் சாகக் காரணமான கோல்ட்ரிப் ஆலை மூடல்! - அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு!

காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்வோம்: தமிழக அரசுக்கு ஜாக்டோ-ஜியோ எச்சரிக்கை..!

முதுகுவலி சரியாக தவளைகளை விழுங்கிய மூதாட்டி! ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி!

அடுத்த கட்டுரையில்
Show comments