Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதலிரவு வீடியோவை வலைதளத்தில் பதிவிட்ட கணவர்! ஷாக் ஆன மனைவி!

Webdunia
திங்கள், 12 டிசம்பர் 2022 (16:14 IST)
மத்திய பிரதேசத்தில் வரதட்சணை கேட்டு மிரட்டிய கணவர் முதலிரவு வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசத்தில் உள்ள மச்லி மண்டி பகுதியை சேர்ந்த 27 வயது இளைஞர் ஒருவருக்கும், இளம்பெண்ணுக்கும் 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் அந்த இளைஞர் தனது மனைவியிடம் அடிக்கடி வரதட்சணை கேட்டு பிரச்சினை செய்து வந்துள்ளார்.

அடிக்கடி மனைவியை அவர் அடிப்பதும், துன்புறுத்துவதாகவும் சில சம்பவங்கள் நடந்துள்ளன. இதனால் தனது தாயார் வீட்டிற்கே சென்ற இளம்பெண் தனது கணவர் மீது வரதட்சணை புகாரை அளித்துள்ளார். இந்நிலையில் புகாரை திரும்ப பெறுமாறு மிரட்டிய அவரது கணவர் மிரட்டியுள்ளார்.

ஆனால் அதை இளம்பெண் செய்யாததால் ஆத்திரமடைந்த அவர் இருவரும் உறவு கொள்ளும் முதலிரவு வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து மனைவி அளித்த புகாரின் பேரில் போலீஸார் கணவரை கைது செய்துள்ளனர். விசாரணையில் தனது மனைவியுடன் அவர் செய்யும் சகலத்தையும் திருமணமானது முதலாகவே அவர் வீடியோ எடுத்து வைத்திருந்தது தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edit By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

3-வது மாடியில் இருந்து தவறி விழுந்த பெண்..! நெஞ்சை பதற வைக்கும் வீடியோ..!!

மதுவிலக்கு துறை அமைச்சரை பதவி நீக்கம் செய்க.! கள்ள மௌனம் காக்கும் முதல்வர்..! அண்ணாமலை...

4 நகராட்சிகள் 20 நாட்களில் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும்.! அமைச்சர் கே.என். நேரு அறிவிப்பு.!!

இதெல்லாம் சகஜம்தான்… ஐ வில் கம்பேக்- தீவிபத்தில் சிக்கிய சிறுவன் பேட்டி!

தனக்கு பிறந்ததா என சந்தேகம்.. 1 வயது குழந்தையை கொலை செய்த தந்தை.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments