Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனைவி மீது சிறுநீர் கழித்த கணவன்! – வரதட்சணை கொடுமை செய்வதாக புகார்!

Webdunia
வெள்ளி, 12 ஆகஸ்ட் 2022 (12:08 IST)
பெங்களூரில் வரதட்சணை கேட்டு தன் மேல் சிறுநீர் கழித்து கணவர் கொடுமைப்படுத்துவதாக பெண் அளித்துள்ள புகார் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த ஆயத்த ஆடை தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வரும் தொழிலதிபர் ஒருவர் கடந்த 2021ம் ஆண்டு தனது மகளுக்கு பெங்களூரை சேர்ந்த சந்தீப் என்ற நபரை திருமணம் செய்து வைத்துள்ளார்.

சுமார் 6 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக நடந்த இந்த திருமணத்தில் சந்தீப்பிற்கு வரதட்சணையாக 200 கிலோ வெள்ளி, 4 கிலோ தங்கம் மற்றும் 55 லட்ச ரூபாய் மதிப்பிலான ஒரு கார் ஆகியவை வழங்கப்பட்டுள்ளது. திருமணம் முடிந்து சில காலம் திருமண வாழ்க்கை சுமூகமாக சென்றுள்ளது.

பின்னர் சந்தீப்பும், அவரது பெற்றோரும் மேலும் வரதட்சணை வாங்கி வரும்படி இளம்பெண்ணை சித்ரவதை செய்ய தொடங்கியுள்ளனர். அடிக்கடி குடித்து விட்டு வரும் சந்தீப் இளம்பெண் மீது சிறுநீர் கழித்து கொடுமைப்படுத்தியுள்ளார். இதை பொறுக்க முடியாமல் இறுதியாக இளம்பெண் காவல் நிலையத்தை அணுகி மேற்கண்ட சம்பவங்களை கூறி சந்தீப் குடும்பத்தார் மீது புகார் அளித்துள்ளார். அதன் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்