Webdunia - Bharat's app for daily news and videos

Install App

30 ரூபாய் கேட்ட மனைவி… முத்தலாக் சொன்ன கணவன் !

Webdunia
செவ்வாய், 2 ஜூலை 2019 (12:08 IST)
டெல்லியில் வீட்டுக்குத் தேவையான காய்கறிகள் வாங்க பணம் கேட்ட மனைவியை கணவன் முத்தலாக் சொல்லி விலக்கியுள்ள சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

டெல்லியை அடுத்த தாத்ரி பகுதியில் சபீர் என்பவர் தனது மனைவி ஸைனப்புடன் வசித்து வருகிறார். சில நாட்களுக்கு முன்னர் ஸைனப் தன் கணவரிடம் காய்கறி வாங்குவதற்காக 30 ரூபாய் கேட்டுள்ளார். ஆனால் வேண்டுமென்றே அதைத் தர மறுத்த சபீர் ஸைனப்பிடம் தகராறு செய்துள்ளார். இந்நிலையில் இருவருக்கும் இடையே நடந்த வாக்குவாதத்தில் நடுரோட்டில் வைத்து மூன்று முறை தன் மனைவியைப் பார்த்து முத்தலாக் சொல்லியுள்ளார்.

இந்த அநியாயத்தை ஸைனப் தட்டிக்கேட்க சபீர் தனது  குடும்பத்தோடு சேர்ந்து ஸைனப்பை அடித்து உதைத்தது மட்டுமல்லாமல் அவர் முகத்தில் காறித் துப்பியுள்ளார். இதனையடுத்து அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் இதுபற்றிப் போலிஸில் புகார் அளித்துள்ளார். ஸைனப்பின் புகாரையடுத்து அதையடுத்துப் போலிஸார் சபீரைக் கைது செய்தனர். மேலும் தலைமறைவாகியுள்ள அவரது குடும்பத்தினரையும் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments