Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மனைவியை துண்டு துண்டாக வெட்டி எரித்துக் கொன்ற கணவர்

மனைவியை துண்டு துண்டாக வெட்டி எரித்துக் கொன்ற கணவர்
, புதன், 6 ஜூலை 2016 (19:19 IST)
மனைவியை துண்டு துண்டாக வெட்டி சூட்கேசில் எடுத்துச் சென்று காட்டில் எரித்துக் கொன்ற கணவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
 

 
ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் ரூபேஷ் குமார் அகர்வால் (35) இவரது மனைவி சிந்தியா. இவர் காங்கோ நாட்டைச் சேர்ந்தவர். இந்நிலையில், பணப் பிரச்சனை காரணமாக தனது மனைவி சந்தியாவை அகர்வால் கொலை செய்ததாக கூறப்படுகிறது.
 
கொலை செய்த பின்னர் உடலை துண்டு துண்டாக வெட்டி சூட்கேசில் வைத்துக் அடைத்து, தனது ஐந்து வயது மகளையும் அழைத்துக்கொண்டு ஹைதராபாத் அருகே உள்ள ஒரு கிராமப்பகுதிக்கு காரில் சென்றார்.
 
அங்கு, தனது மனைவி சந்தியாவின் உடலை ரூபேஷ்குமார் தீவைத்து எரித்துள்ளார். அப்போது அங்கு புகை வருவதைப் பார்த்த கிராம மக்கள் ஓடி வந்துள்ளனர். அங்கு அகர்வால் நிற்பதைப் பார்த்த அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
 
கிராம மக்களைப் பார்த்ததும் ரூபேஷ்குமார் அங்கிருந்து காரில் ஏறி தப்பிச் செல்ல முயன்றுள்ளார். கார் சேறுக்குள் சிக்கிக் கொண்டதால் போக முடியவில்லை. இதனால் அவர் கிராமமக்களிடம் சிக்கிக் கொண்டுள்ளார்.
 
பின்னர், அருகில் உள்ள காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் ரூபேஷ்குமாரை கைது செய்தனர். கொலை செய்யப்பட்ட சிந்தியாகாங்கோ நாட்டைச் சேர்ந்தவர். பணப் பிரச்சனையில் மனைவியை அகர்வால் கொன்றதாக கூறப்படுகிறது.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ராம்குமாரின் சம்மதத்துடன் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்படவில்லை : உறவினர் பரபரப்பு பேட்டி