Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாட்ஸ் ஆப் மூலம் தலாக் சொன்ன கணவர்: முத்தலாக் தடை சட்டம் நிறைவேறிய பிறகும் நடக்கும் கொடுமை

Webdunia
வியாழன், 8 ஆகஸ்ட் 2019 (12:28 IST)
உத்தர பிரதேசத்தைச் சேந்த ஒருவர், வாட்ஸ் ஆப் மூலம் தனது மனைவிக்கு மூன்று முறை முத்தலாக் கூறி விவாகரத்து செய்துள்ளார்.

முத்தலாக் தடை மசோதா சமீபத்தில் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட பிறகு, இந்தியாவின் பல மாநிலங்களில் முத்தலாக் தடை சட்டத்தின் கீழ் பல வழக்குகள் பதியப்பட்டு வருகின்றன. இதனைத் தொடர்ந்து தற்போது உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் தன்னுடைய மனைவிக்கு வாட்ஸ் ஆப் மூலம் மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து செய்துள்ளார்.

குவைத் நாட்டில் வேலை செய்து வரும் இவர் மீது, கடந்த மே மாதம் 27 ஆம் தேதி, வரதட்சனை கேட்டு துன்புறுத்தவதாக அவரது மனைவி உத்தர பிரதேசத்தின் சிகேதா நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதன் பின்பு அந்த புகாரை வாபஸ் பெறுமாறு தன் மனைவியை மிரட்டியுள்ளார். ஆனால் அவர் மனைவி அந்த மிரட்டலுக்கெல்லாம் பயப்படவில்லை.

இதனைத் தொடர்ந்து நேற்று வாட்ஸ் ஆப் மூலம், அவர் மனைவிக்கு மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து செய்துள்ளார். இது பற்றி சிகேதா காவல் நிலையத்தில் அந்த பெண் புகார் அளித்துள்ளார். தற்போது அப்புகாரின் அடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூன்று மாவட்டங்களுக்கு நாளை பள்ளி விடுமுறை.. மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு..!

கல்லூரி தேர்வில் ஆர்.எஸ்.எஸ் குறித்து சர்ச்சை கேள்வி.. வினாத்தாள் தயாரித்த பேராசிரியருக்கு வாழ்நாள் தடை..!

கோழியை காப்பாற்றி முதலையை ஏப்பம் விட்ட ஆனந்த் அம்பானி? - கலாய்க்கும் நெட்டிசன்கள்!

ஐபிஎல் டிக்கெட் கள்ளச்சந்தை விற்பனை! 11 பேரை டிக்கெட்டும் கையுமாக கைது செய்த போலீஸ்!

Rain alert: கோடையை குளிர்விக்கும் மழை.. இன்று 5 மாவட்டங்களில் மழை வாய்ப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments