Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தவறு செய்தவர்களைத் தவிர அனைவரும் மன்னிக்கப்படுவர் – கொலை நடந்த வீட்டில் கடிதத்தால் பரபரப்பு !

Webdunia
வெள்ளி, 14 பிப்ரவரி 2020 (07:56 IST)
கேரளாவின் திருச்சூர் பகுதியில் வசித்து குடும்பத்தினரில் கணவன் மனைவி இருவரும் ஒரே நாளில் கொலை செய்யப்பட்டது பதற்றத்தை உருவாக்கியுள்ளது.

கேரளா மாநிலம் திருச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் தைபரம்பத் வினோத். இவருக்கும் ரேமா என்ற மனைவியும் நயானா என்ற மகளும் நீரஜ் என்ற மகனும் உள்ளனர். நல்ல வசதியான வினோத், தனது குடும்பத்தோடு மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னதாக வினோத் மற்றும் ரேமா ஆகியோர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக அறிந்த போலிஸார் இரு உடல்களையும் கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர்.அதன் பிறகு கொலைந் நடந்த வீட்டில் சோதனை செய்தபோது. ஒரு கடிதம் கிடைத்துள்ளது. அதில், ’தவறு செய்தவர்களை தவிர மற்ற அனைவரும் தண்டிக்கப்படுவார்கள்’ என எழுதப்பட்டு இருந்தது. இந்த கடிதத்தை வைத்து இப்போது கொலையாளிகளைப் போலீஸார் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments