Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாகிஸ்தான் பிரதமருக்கு மோடி பிரியாணி பரிமாறுவார் - சசிதரூர் கிண்டல்

பாகிஸ்தான் பிரதமருக்கு மோடி பிரியாணி பரிமாறுவார் - சசிதரூர் கிண்டல்
, வெள்ளி, 23 மே 2014 (11:30 IST)
நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவுக்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் வந்தால், அவருக்கு நரேந்திர மோடி கோழி பிரியாணி பரிமாறுவார் என்று நம்பலாம் என்று காங்கிரஸ் தலைவர் சசிதரூர் கிண்டலாக கூறியுள்ளார்.
 
கடந்த மார்ச் மாத இறுதியில், பாக்பத் பகுதியில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய மோடி, "கடந்த 2013ஆம் ஆண்டுல இந்திய- பாகிஸ்தான் எல்லையில் இண்டு இந்திய ராணுவ வீரர்கள் தலை துண்டித்துக் கொல்லப்பட்டனர்.
 
பாகிஸ்தான் இதுபோன்ற செயலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது, இந்தியாவுக்கு தனிப்பட்ட முறையில் வந்த பாகிஸ்தான் பிரதமர் பர்வேஸ் அஷ்ரபுக்கு காங்கிரஸ் அரசாங்கம் கோழி பிரியாணி வழங்கி விருந்தளித்துக் கொண்டிருக்கிறது” எனக் குற்றஞ்சாற்றி பேசினார்.
 
இந்நிலையில் மோடியின் பதவியேற்பு விழாவிற்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இது குறித்து,
சசிதரூர் தனது ட்விட்டர் சமூக இணையதளத்தில், நவாஸூக்கு மோடி பிரியாணி பரிமாறுவார் என நம்பலாம் என கூறியுள்ளார்.
 
மேலும், மோடியின் சமரச நோக்குடைய உரையால் தான் மிகவும் கவரப்பட்டதாகவும் தரூர் ட்விட்டரில் கிண்டலாக கருத்து தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil