Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சாமியார் சந்திரா சாமி காலமானார்...

சாமியார் சந்திரா சாமி காலமானார்...
, செவ்வாய், 23 மே 2017 (18:35 IST)
மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் தொடர்புடையவராக கருதப்பட்ட பிரபல சாமியார் சந்திரா சாமி இன்று மரணமடைந்ததாக செய்தி வெளியாகியுள்ளது.


 

 
1990களில் அரசியல் பேரங்களில் மும்முரமாக ஈடுபட்டிருந்தவர் சாமியார் சந்திரா சாமி. 1991ம் ஆண்டு ராஜிவ் காந்தி கொலை செய்யப்பட்ட போது, அவரின் மரணம் பற்றி சந்திரா சாமிக்கு முன்பே தெரியும் என செய்தி வெளியானது. எனவே, இவரிடம் விசாரணையும் நடத்தப்பட்டது.
 
அரசியல்வாதிகளின் செல்வாக்கு பெற்றிருந்த இவர், கடந்த பல வருடங்களாக ஊடகங்களின் கண்ணில் படாமல் வாழ்ந்து வந்தார். இந்நிலையில், மாரடைப்பு காரணமாக அவர் இன்று காலமானார் என தகவல் வெளியாகியுள்ளது.

webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

யாரு தெர்மாக்கோலா?: செல்லூர் ராஜுவை வாரிய துரைமுருகன்!