Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண்களுக்கு துரோகம் இழைத்த மோடி: இமாச்சல பிரதேசத்தில் சர்ச்சை குற்றச்சாட்டு!!

Webdunia
திங்கள், 6 நவம்பர் 2017 (13:58 IST)
பிரதமர் நரேந்திர மோடி பெண்களுக்கு துரோகம் இழைத்துவிட்டதாக இமாச்சல பிரதேச முதல்வர் வீரபத்ர சிங் குற்றம் சாட்டியுள்ளார்.


 
 
இமாச்சல பிரதேசத்தில் வரும் 9 ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. 
 
தேர்தலுக்கு சில தினங்களே உள்ள நிலையில் காங்கிரஸ் மற்றும் பாஜக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இமாச்சல பிரதேச முதல்வர் வீரபத்ர சிங் தனது டிவிட்டர் பக்கத்தில் பின்வருமாரு பதிவிட்டுள்ளார். 
 
பிரதமர் நரேந்திர மோடி, பெண்களின் நலனுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். மகளிர் இட ஒதுக்கீடு மசோதா கடந்த 2010 மார்ச் 9 ஆம் தேதி மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. 
 
இந்த மசோதாவை பெரும்பான்மை பயன்படுத்தி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடந்த செப்டம்பர் 21 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதினார். 
 
ஆனால், இன்று வரை இந்த மசோதாவை நிறைவேற்றாமல் பிரதமர் பெண்களுக்கு துரோகம் இழைத்துவிட்டார் என குற்றம் சாட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதானி குழுமத்தில் எல்.ஐ.சியின் ரூ.5000 கோடி முதலீடு ஏன்? ராகுல் காந்தி கேள்வி..!

IRCTCயில் 2.5 கோடி போலி கணக்குகள்.. முன்பதிவு செய்து அதிக விலைக்கு டிக்கெட் விற்பனை..!

விராத் கோலிக்கு பொருத்தமான மகுடம்.. அடுத்த வருடம் சிஎஸ்கே.. முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து..!

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

அடுத்த கட்டுரையில்
Show comments