Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமர் மோடிக்கு பரிசு அளித்த கருணாநிதி...

Webdunia
திங்கள், 6 நவம்பர் 2017 (13:39 IST)
பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை திமுக தலைவர் கருணாநிதியை அவரது வீட்டில் சந்தித்து நலம் விசாரித்தார்.


 

 
சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு அரங்கில் நடைபெற்ற தினந்தந்தி பவளவிழாலில் கலந்து கொள்வதற்காக இன்று தமிழகம் வந்த மோடி, அந்த நிகழ்ச்சிக்கு பின் பகல் 12.30 மணியளவில் கருணாநிதியை அவரது வீட்டில் சந்தித்து உடல் நலம் விசாரித்தார்.
 
அவருடன் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், நிர்மலா சீதாராமன் ஆகியோர் உடனிருந்தனர். அவர்களும் கருணாநிதியை நலம் விசாரித்தனர். 
 
மோடியை திமுக செயல் தளபதி மு.க.ஸ்டாலின் வரவேற்று வீட்டின் உள்ளே அழைத்து சென்றார். அருகில் கனிமொழி, துரை முருகன் ஆகியோர் இருந்தனர். கருணாநிதியின் கைகளை பிடித்துக்கொண்ட மோடி, ஓய்வு எடுக்க டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்திற்கு வருமாறு கருணாநிதிக்கு அழைப்பு விடுத்தார். அப்போது, முரசொலி பவளவிழா மலரை பிரதமர் மோடிக்கு கருணாநிதி பரிசாக வழங்கினார். சுமார் 15 நிமிடங்கள் அங்கிருந்த மோடி அதன் பின் அங்கிருந்து கிளம்பி சென்றார்.


 

 
நீட் தேர்வு,  மீத்தேன் வாயு, ஹைட்ரோகார்பன் திட்டம், ஜி.எஸ்.டி உட்பட பாஜகவின் பல திட்டங்களை திமுக கடுமையாக எதிர்த்து வருகிறது. இந்த நிலையில், கருணாநிதி-மோடி சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments