Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கர்நாடகாவில் ஹிஜாப்பிற்கான தடை தொடரும்: கல்வி அமைச்சர் தகவல்

Hijab
, வியாழன், 13 அக்டோபர் 2022 (14:01 IST)
ஹிஜாப் அணிய தடை விதித்து கர்நாடக உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மேல்முறையீடு செய்த சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. இந்த தீர்ப்பில் இரண்டு நீதிபதிகள் இரண்டு மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கியதால் எந்த தீர்ப்பை பின்பற்றுவது என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது
 
இந்த நிலையில் கர்நாடக மாநில கல்வித்துறை அமைச்சர் நாகேஷ் அவர்கள் இன்று செய்தியாளர்களை சந்தித்த போது கர்நாடக மாநிலத்தில் கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய கர்நாடக ஐகோர்ட்டு விதித்த தடை தொடரும் என்று தெரிவித்துள்ளார் 
 
சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை வரவேற்கிறோம் என்றும் உலகெங்கிலுமுள்ள பெண்கள் ஹிஜாப் அணிய வேண்டாம் என்று கோரிக்கை விடுத்து வருவதால் சிறந்த தீர்ப்பை நாங்கள் எதிர்பார்த்தோம் என்றும் கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு இடைக்காலத்தில் பொருந்தும் என்பதால் மாநிலத்தில் உள்ள அனைத்து கல்வி நிலையங்களிலும் ஹிஜாப் அணிவதற்கான தடை நீடிக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரூ.100 கட்டணத்தில் சென்னை மெட்ரோ ரயிலில் விருப்பம் போல் பயணம்