Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒமிக்ரான் வைரஸ்... மத்திய அரசு என்ன செய்யப்போகிறது? உச்சநீதிமன்றம் கேள்வி

Webdunia
திங்கள், 29 நவம்பர் 2021 (12:56 IST)
புதிய வகை கொரோனா பிரச்சனையாக உருவெடுத்துள்ள நிலையில் மத்திய அரசு என்ன செய்யப்போகிறது? என உச்சநீதிமன்றம் கேள்வி. 

 
தென் ஆப்பிரிக்காவில் ஒமிக்ரான் என்னும் புதிய கொரோனா வைரஸ் பரவத்தொடங்கிய நிலையில் ஆப்பிரிக்க, ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் இதன் பாதிப்புகள் தென்பட தொடங்கியுள்ளன. இது உலக நாடுகளுக்கு புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. பல நாடுகளிலும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு உள்ள நாடுகளிலிருந்து மக்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில், புதிய வகை கொரோனா வைரஸ் குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, புது வகை கொரோனா புதிய பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது. புதிய வகை கொரோனா பிரச்சனையாக உருவெடுத்துள்ள நிலையில் மத்திய அரசு என்ன செய்யப்போகிறது? என கேள்வி எழுப்பியுள்ளார். 
 
ஓமைக்ரான் அச்சுறுத்தல் எதிரொலியாக சர்வதேச விமான பயணிகளுக்கு ஒன்றிய சுகாதாரத்துறை கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. விமான நிலையத்திலேயே வெளிநாட்டு பயணிகளுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை கட்டாயம் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டிசம்பர் 1 ஆம் தேதி முதல் இது அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

திஹார் சிறையில் அடைத்தாலும் தொகுதிகளை விட்டுத்தர மாட்டோம்: சென்னையில் டி.கே.சிவகுமார் ஆவேசம்..!

நீண்ட ஏற்றத்திற்கு சற்று சரிந்த தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!

நாங்கள் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரானவர்கள் அல்ல; ஆனால்...! - முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு..!

முன்னாள் அர்ஜெண்டினா அதிபர் அமெரிக்காவில் நுழைய தடை: அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments