Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிவேக தகவல் தொடர்பு சேவை செயற்கைகோள் : ஜிசாட் 7 விண்ணில் ஏவப்பட்டது

Webdunia
புதன், 19 டிசம்பர் 2018 (16:18 IST)
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில்  இருந்து இன்று மாலை 4:10க்கு ஜிசாட் 7 ஏ என்ற செயற்கைகோள் அதிவேக தகவல் தொடர்புக்காகவும், இணையதள சேவைக்காகவும் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் அனைத்து பகுதிகளிலும் தகவல் தொடர்பு சேவை கிடைக்கவேண்டி ஜிசாட் 7 ஏ என்ற செயற்கைக்கோளை இஸ்ரோ விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர். இதன் எடை 2, 250 கிலோ என்று கூறப்படுகிறது.
 
நம்நாட்டில் தயார் செய்யப்பட்ட செயற்கைக்கோள்களில் இது 35 வது என்ற சிறப்பை பெற்றுள்ளது. இதன் ஆயுட்காலம் 8 ஆண்டுகள் ஆகும். இந்திய எல்லைப்பகுதியில் தகவல் தொடர்பை மேம்படுத்துவதற்காகவே இது விண்ணில் நிறுத்தப்படவுள்ளது.குறிப்பாக இஸ்ரோவின் ஸ்டாண்டர்டு1.2 k அடிப்படையில் இது உருவாக்கப்பட்டுள்ளது.
 
மேலும் ஜிஎஸ்எல்வியின்  13வது ராக்கெட்டான எஃப் 11 ராக்கெட்டுடன் இது செலுத்தப்பட்டுள்ளது.இதற்காக கவுண்டவுன் நேற்று தொடங்கிய நிலையில் ஜிசாட் 7 ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து தற்போது வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.
 
இது நம் இந்தியாவின் சாதனையாகவும் பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments